Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

Go down

பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து! Empty பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

Post by oviya Tue Dec 09, 2014 1:09 pm

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 4ம் பிரிவு தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மரக்கறி தோட்டமொன்றிலிருந்து சிசு ஒன்றை டயகம பொலிஸாரும்,பொது மக்களும் நேற்று மீட்டுள்ளனர்.
குறித்த சிசு நேற்று மாலை 6 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சிசு டயகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட போதும், சிசுவின் நிலைமையும்,தாயின் நிலைமையும் மிக கவலைக்கிடமாக இருந்ததால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் சிசுவின் தாய் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட தாயை பொலிஸார் பாதுகாப்புடன் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

இதன் போது தாயாரை விசாரித்த போது இன்னும் திருமணம் முடிக்காதவர் எனவும் 19வயது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் சிசுக்களை கழுத்தை முறித்து கொன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிக்கின்றனர்.

அத்தோடு பொது மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்ககூடாது என்பதற்காக டயகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக டயகம பொலிஸ் அதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று நோர்வூட் கோர்த்தி பகுதியில் வீதியை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகனத்தை அதிக வேகமாக செலுத்தியதாலேயே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயத்திற்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர்களின் நிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததால் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கரவண்டி சாரதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையெனவும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளத்தில் வீழ்ந்த பயணிகள் பஸ்: சிறுவன் பலி! 44 பேர் காயம்- முச்சக்கர வண்டி விபத்து: மாணவி பலி
» தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்
» பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம்
» அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவினர் பயணித்த வாகனம் விபத்து: எழுவர் காயம்
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum