Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!- லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

Go down

பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!- லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் Empty பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!- லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

Post by oviya Wed Dec 10, 2014 1:07 pm

லிந்துலை நாகசேனை பஸ் தரிப்பிடத்தில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.
குநித்த நபர் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை டீ மலையில் தோட்டத்தில் உள்ள 57 வயதுடைய முனியாண்டி ஆண்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் (09.12.2014) நேற்று சுகயீனம் காரணமாக தனது உறவினர்களால் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு திடீரென வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து வைத்தியசாலையிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள லிந்துலை நாகசேனை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை சடலமாக பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வீதியை கடந்து செல்லும் போது பஸ் தரிப்பிடத்தில் குறித்த நபர் உயிரிழந்து கிடப்பதை கண்டுள்ளனர். அதன்பின் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் எவ்வாறு வெளியில் சென்றார் என்பது வைத்தியசாலை நிருவாகத்திற்கு தெரியவில்லை என தெரியவருகிறது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாகசேனை நகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

டீமலை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கண்டன பேரணி நாகசேனை நகர்வரை சென்றது.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முணியான்டி ஆண்டி பஸ் தரிப்பிடத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்தும் வைத்தியசாலை நிர்வாக மாற்றம் கோரியும் பொது மக்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
» வீதியில் உணவு சமைத்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம்
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
» கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum