மோடி தமிழ்நாடு வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்! - ராஜபக்சவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
Page 1 of 1
மோடி தமிழ்நாடு வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்! - ராஜபக்சவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
பிரதமர் மோடி தமிழ் நாட்டிற்கு எப்போது வந்தாலும் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை வந்திருந்த வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜபக்ச திருப்பதி வர மோடி அரசே காரணம்.
இலங்கையில் 1500 க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளிய ராஜபக்சவுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்குள் வர அனுமதியளித்ததை மதிமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
இதற்கு காரணமான பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் மதிமுக சார்பில் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தபபடும் என்று கூறினார்.
ராஜபக்சவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
ராஜபக்சவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும் என்று மத்திய அரசை ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், '
வங்கக்கடலில் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 43 மீனவர்களை சிங்களப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இந்த மீனவர்களுக்குச் சொந்தமான 5 படகுகளையும் சிங்களப்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
போதை மருந்து கடத்தியதாக கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை சிங்கள அரசு விடுதலை செய்யப்பட்ட பிறகு, இரண்டாவது முறையாக தமிழக, புதுவை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 23ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 3 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 43 மீனவர்களும் அவர்களின் 5 படகுகளும் பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
இந்த இரு சம்பவங்களும் இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளன. இலங்கைப் படையின் இந்நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையிலும், தமிழக மீனவர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையிலும் இந்த அத்துமீறலை இலங்கைப் படைகள் நடத்தியிருக்கின்றன.
அப்படியென்றால், மீனவர்கள் பிரச்னையில், இந்திய அரசை இலங்கை எந்த அளவுக்கு மோசமாக மதிக்கிறது என்பதை இந்த உதாரணங்களிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இனியும் ஒருமுறை தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், ராஜபக்ச கும்பலுக்கு வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசும், மாநில அரசுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 79 படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு 6 மாதங்களுக்கும் மேலாகவும், 38 மீனவர்களை கைது செய்து 3 வாரங்களுக்கு மேலாகவும் இலங்கை அரசு விடுவிக்க மறுத்துவரும் நிலையில், அந்த நாட்டின் அதிபர் மீண்டும் வெற்றி பெற இந்தியப் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி திருப்பதி கோவிலில் அவருக்கு முழுக்குட மரியாதை அளிக்கப்படுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. மத்திய அரசின் நிலை இப்படியென்றால் தமிழக அரசோ மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.
மீனவர்கள் பிரச்னை தொடர்பாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் முந்தைய முதலமைச்சர் ஜெயலலிதா 57 முறையும், இப்போதைய முதலமைச்சர் நான்கு முறையும் பிரதமருக்கு கடிதம் எழுதியும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.
இத்தகைய சூழலில் அதிரடியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக மீண்டும், மீண்டும் கடிதம் மட்டும் எழுதினாலே கடமை முடிந்துவிட்டது என்று தமிழக அரசும், முதலமைச்சரும் கருதுகிறார்கள்.
இந்தியப் பிரதமராக இந்திராவும், தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆரும் இருந்தபோது இலங்கைக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியங்களைத் தந்திருக்கிறார்கள். அதேபோன்ற அணுகுமுறையை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய காலம் இப்போது மீண்டும் வந்திருக்கிறது.
எனவே, இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 81 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும், 84 படகுகளையும் விடுவிக்க வேண்டும்; இனியும் தமிழக மீனவர்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய இலங்கை மறுத்தால், தமிழக முதலமைச்சர் டெல்லியில் முகாமிட்டு, அந்த நாட்டுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மதுரை வந்திருந்த வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜபக்ச திருப்பதி வர மோடி அரசே காரணம்.
இலங்கையில் 1500 க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளிய ராஜபக்சவுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்குள் வர அனுமதியளித்ததை மதிமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
இதற்கு காரணமான பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் மதிமுக சார்பில் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தபபடும் என்று கூறினார்.
ராஜபக்சவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
ராஜபக்சவுக்கு மறக்க முடியாதபடி பாடம் கற்பிக்க வேண்டும் என்று மத்திய அரசை ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், '
வங்கக்கடலில் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 43 மீனவர்களை சிங்களப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இந்த மீனவர்களுக்குச் சொந்தமான 5 படகுகளையும் சிங்களப்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
போதை மருந்து கடத்தியதாக கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை சிங்கள அரசு விடுதலை செய்யப்பட்ட பிறகு, இரண்டாவது முறையாக தமிழக, புதுவை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 23ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 3 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 43 மீனவர்களும் அவர்களின் 5 படகுகளும் பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
இந்த இரு சம்பவங்களும் இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளன. இலங்கைப் படையின் இந்நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையிலும், தமிழக மீனவர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையிலும் இந்த அத்துமீறலை இலங்கைப் படைகள் நடத்தியிருக்கின்றன.
அப்படியென்றால், மீனவர்கள் பிரச்னையில், இந்திய அரசை இலங்கை எந்த அளவுக்கு மோசமாக மதிக்கிறது என்பதை இந்த உதாரணங்களிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இனியும் ஒருமுறை தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், ராஜபக்ச கும்பலுக்கு வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசும், மாநில அரசுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 79 படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு 6 மாதங்களுக்கும் மேலாகவும், 38 மீனவர்களை கைது செய்து 3 வாரங்களுக்கு மேலாகவும் இலங்கை அரசு விடுவிக்க மறுத்துவரும் நிலையில், அந்த நாட்டின் அதிபர் மீண்டும் வெற்றி பெற இந்தியப் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி திருப்பதி கோவிலில் அவருக்கு முழுக்குட மரியாதை அளிக்கப்படுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. மத்திய அரசின் நிலை இப்படியென்றால் தமிழக அரசோ மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.
மீனவர்கள் பிரச்னை தொடர்பாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் முந்தைய முதலமைச்சர் ஜெயலலிதா 57 முறையும், இப்போதைய முதலமைச்சர் நான்கு முறையும் பிரதமருக்கு கடிதம் எழுதியும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.
இத்தகைய சூழலில் அதிரடியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக மீண்டும், மீண்டும் கடிதம் மட்டும் எழுதினாலே கடமை முடிந்துவிட்டது என்று தமிழக அரசும், முதலமைச்சரும் கருதுகிறார்கள்.
இந்தியப் பிரதமராக இந்திராவும், தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆரும் இருந்தபோது இலங்கைக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியங்களைத் தந்திருக்கிறார்கள். அதேபோன்ற அணுகுமுறையை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய காலம் இப்போது மீண்டும் வந்திருக்கிறது.
எனவே, இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 81 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும், 84 படகுகளையும் விடுவிக்க வேண்டும்; இனியும் தமிழக மீனவர்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய இலங்கை மறுத்தால், தமிழக முதலமைச்சர் டெல்லியில் முகாமிட்டு, அந்த நாட்டுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» 10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு ராஜமரியாதை கொடுப்பாரா? - வைகோ ஆவேசம்
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா
» ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு: ஈழத் தமிழர் பற்றி கலந்துரையாடல்
» புலிகளை ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: சுவாமி - முடிந்தால் செய்யட்டும்- வைகோ
» அதாவுல்லாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு
» மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா
» ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு: ஈழத் தமிழர் பற்றி கலந்துரையாடல்
» புலிகளை ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: சுவாமி - முடிந்தால் செய்யட்டும்- வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya