Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Go down

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் Empty ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Post by oviya Wed Dec 10, 2014 1:25 pm

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு கோயில்களில், நீர்நிலைகளில் லட்சக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தை, மாசி, ஆடி, மஹாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் புனித தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு இந்துக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆடி அமாவாசை நாளான இன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடந்தது.

இன்று அதிகாலை 5 மணி முதல் அக்னி தீர்த்த கடலில் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். காலை 7 மணியளவில் ஸ்ரீராமர், தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். நான்கு ரத வீதிகளில் பல மணி நேரம் காத்திருந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி, குழித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜைகளை நடத்தினர்.

நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கடற்கரையில் இருந்த புரோகிதர்களிடம் பலிகர்ம பூஜைகளை செய்தனர். தங்கள் முன்னோர்களுக்கு பிடித்தவற்றை படைத்து வணங்கி, அதை திரிவேணி சங்கமத்தில் கரைத்து புனித நீராடினர். பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. ஆடி அமாவாசையில் பலிகர்ம பூஜைகளை முடித்துவிட்டு பக்தர்கள் கடலில் குளிப்பது வழக்கம். இன்று காலை கடல் உள்வாங்கி நீர்மட்டம் குறைவாக காணப்பட்டதால் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் குளிக்க முடியாத நிலை இருந்தது. கடல் உள்வாங்கியதால் குட்டை போல் தேங்கி கிடந்த நீரில் உடலை நனைத்துக் கொண்டு திரும்பினர்.

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கம் அம்மா மண்படம் நேற்று மூடப்பட்டது. இதனால் அம்மா மண்டபத்தின் வெளியில் ரோட்டில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் மாம்பல சாலையில் இருந்து அம்மா மண்டபம் ஸ்ரீரங்கம் வரை ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் உட்கார்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள மலட்டாறில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தடையை மீறி யாரும் காவிரி ஆற்றில் குளிக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
» இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» அக்னி பூஜித்த அரன்
» ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா : ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum