Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கல்கி அவதாரம் எப்போது?

Go down

கல்கி அவதாரம் எப்போது? Empty கல்கி அவதாரம் எப்போது?

Post by oviya Wed Dec 10, 2014 1:51 pm

வடமொழியில் அஸ்வத்த ராஜபுரம் என்றும் தமிழில் அரசலூர் என்றும் வழங்கப்படும், அரச மரங்கள் நிறைந்த ஊர் அரசலூர். திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இவ்வூரில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இவர் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற நம்பிக்கையில் இந்த ஊரே அஸ்வத்தவூர் என அழைக்கப்பட்டு, பின்னாளில் அரசலூர் என்றாகிவிட்டதாம். என்று நிகழும் அந்த அவதாரம் என்று பக்தர்கள் பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.

திருப்பதி ஸ்ரீநிவாசரை குல தெய்வமாகக் கொண்ட, இவ்வூரில் வாழ்ந்த சில குடும்பத்தினர், இத்தலத்து ஸ்ரீநிவாசர் உற்சவருடன், பிரசன்ன வெங்கடேச பெருமாளையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த பழமை வாய்ந்த ஆலயத்திலுள்ள மூர்த்திகள் மற்றும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கம் வாய்ந்தவை. ஆலய மேல் விதானத்தில் சூரிய-சந்திர-கிரகண சுதை சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. உள்ளேயிருக்கும் ஒரு தூணில் பெருமாளை சேவிக்கும் தம்பதியர் சிலைகள் உள்ளன. இவர்களே இந்த ஆலயத்தை கட்டியவர்களாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால், நோயற்ற வாழ்வு, தொழில் முன்னேற்றம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

இத்திருத்தலத்தில் கம்பத்தடியான் என்று அழைக்கப்படுகின்ற ஆஞ்சநேயர், கையில் சஞ்சீவி மலையுடன் தெற்கு திசை பார்த்து காட்சியளிக்கிறார். இவரை வேண்டி வழிபட, எமபயம் நீங்கும் என்றும் வேண்டிய வரங்கள் கிட்டும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இத்திருத்தலத்தில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் போன்றோரும் இருப்பதால் அவர்களை வழிபட பில்லி, சூனியம், ஏவல், கடன் தொல்லைகள் தீருமென்றும் திருமணத் தடைகள் நீங்குமென்றும் மகப்பேறு வேண்டி வழிபடுவோருக்கு மகப்பேறு நிச்சயம் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

கல்கி அவதாரம் எடுக்கப்போகும் இந்தப் பெருமாளுக்கு காவல் தெய்வங்களாக இவ்வூரின் தென்மேற்கில் கருப்பண்ண சுவாமியும் வடமேற்கில் பகவதியம்மனும் வடகிழக்கில் மாரியம்மனும் தென்கிழக்கில் பிடாரியம்மனும் கோயில் கொண்டுள்ளனர். மேலும் இவ்வூரில் சுகந்த குந்தலாம்பாள் சமேத தாயுமானவ சுவாமி சிவாலயமும் உள்ளது. ஊரின் தென்திசையில் பரந்து விரிந்த காவிரிக்கரையில் பிரகலாதனுக்கு சாந்த வடிவமாக பெருமாள் தரிசனம் கொடுத்த திருநாராயணபுரம் என்ற ஊர் உள்ளது.

இந்த ஊருக்கு வடக்கே சஞ்சீவி மலையின் ஒரு துண்டு விழுந்து உருவானதாக கூறப்படும் மூலிகைகள் நிறைந்து காணப்படும் தலைமலை உள்ளது. மேலே ராமர் கோயிலும் தொட்டியத்திலேயே தங்கிவிட்ட, மதுர காளியம்மன் ஆலயமும் உள்ளன. குரங்குநாதர் ஆலயம் எனப்படும் ஜினாலயமும் காணப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த அரசலூர் பிரசன்ன வெங்கடேசர் ஆலயம் நிர்மாணித்து இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளே ஆகியிருக்கக் கூடும் என்று தல புராணம் கூறுகிறது. இப்போது நவநீத கிருஷ்ணன் உபய நாச்சிமார்களுடன் வைகாசி விசாக நாளன்று நம்மாழ்வார் சாற்றுமுறை முடிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்கிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum