Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக் கடமையில் அரசியலுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வலயக்கல்விப்பணிப்பாளர்

Go down

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக் கடமையில் அரசியலுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வலயக்கல்விப்பணிப்பாளர் Empty க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக் கடமையில் அரசியலுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வலயக்கல்விப்பணிப்பாளர்

Post by oviya Thu Dec 11, 2014 1:14 pm

பட்டிருப்பு வலயத்தில் பரீட்சைக் கடமைக்கான நியமனத்தில் கல்விக்காக உழைத்துக் கொண்டிருக்கும் உரிய தரத்துடன் கூடிய சிரேஸ்ர அதிபர்கள் ஆசிரியர்கள் இருக்கும்போது அவர்களை புறந்தள்ளிவிட்டு வலயக்கல்விப் பணிப்பாளரின் உறவினர்கள், ...
.. மற்றும் அவரின் அடாவடித்தனத்துக்கு துணைபோகும் சிலருக்கே இக் கடமைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் மன உளைச்சலுக்கு தள்ளும் விடயமாகும் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இம்முறை அனைத்து கல்விச் சமூகத்தினையும் ஒட்டு மொத்தமாக கலங்கவைக்கும் சம்பவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக் கடமை விடயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்குக் காரணம் தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு பரீட்சைக் கடமை விதிமுறைகளையும் மீறி உதவி மேற்பார்வையாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆசிரியர் சேவையில் மூன்று வருடங்களை பூர்த்தி செய்யாத பதவியில் உறுதிப்படுத்தப்படாத ஒருவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்று நிருபத்தின் படி இப் பதவி தரம் 2-1 அதிபருக்கே வழங்க வேண்டும் என்பதுடன் சேவையில் உறுதிப்படுத்தப்படாத ஒருவருக்கு பரீட்சைக் கடமை வழங்க முடியாது என்பதும் அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவர் தனது அரசியல் பலத்தினை பயன்படுத்தியிருப்பது ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தினையும் ஏமாற்றுகின்றதொரு விடயமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது என கல்வியளாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மற்றும் குறிப்பிட்ட ஆசிரியர் (இவரது முதல் நியமனத்திகதி 26.09.2012) கல்குடாகல்வி வலயத்தின் மாங்கேணி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கடமையாற்றி ஒரு வருடங்கள் முடியாத நிலையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார். இதற்கு பணிப்பாளரின் வலது கரமாக செயற்படும் அரசியல்வாதி ஒருவரின் உதவியினைப் பெற்றதாக அறியமுடிகின்றது.

இவ்வாறு குறித்த அரசியல்வாதியுடன் சேர்ந்து செயற்படுவதனால் அதிபர், ஆசிரியர்கள் வாய்மூடி மௌனித்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum