Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மைத்திரியும் திருப்பதி சென்றால் ஏழுமலையான் என்ன செய்வார்?

Go down

மைத்திரியும் திருப்பதி சென்றால் ஏழுமலையான் என்ன செய்வார்? Empty மைத்திரியும் திருப்பதி சென்றால் ஏழுமலையான் என்ன செய்வார்?

Post by oviya Thu Dec 11, 2014 1:22 pm

திருப்பதி வெங்கடேஸ்வரர் உலகம் முழுவதிலும் பேசப்படும் பெருமான் என்று கூறும் அளவில் திருப்பதியான்மீது ஆழ்ந்த நம்பிக்கை உலகெங்கும் உண்டு.
ஏழுமலைகளை உள்ளடக்கிய வெங்கடேஸ்வரப் பெருமானை ஏழுமலையான் என்று அழைப்பது வழமை.

இந்தியாவுக்கு விஜயம் செய்கின்ற உலகத் தலைவர்கள் திருப்பதிக்குச் சென்று வெங்கடேஸ்வரப் பெருமானின் தரிசனத்தைக் காணத் தவறுவதில்லை.

உலகத் தலைவர்கள் அதிகளவில் தரிசனம் செய்த ஆலயம் என்று பெருமையும் திருப்பதிக்கு உண்டு.

அந்த வகையில் நம் நாட்டுத் தலைவர்களும் திருப்பதிக்குச் சென்று வெங்கடேஸ்வரப் பெருமானைத் தரிசனம் செய்வது வழமை. இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ நேற்றைய தினம் திருப்பதி சென்று வழிபாடு செய்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மகிந்த ராஜபக்­ திருப்பதிக்குச் சென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச­ ஏழுமலையானிடம் சுவாமி! மூன்றாவது தடவையும் என்னை ஜனாதிபதி ஆக்கி விடுங்கள் என்று வேண்டுதல் செய்திருப்பார்.

அட, இப்படியாக வேண்டுதல் இருந்திருக்காது என்று கூறுவோரும் இருக்கலாம்.

சுவாமி! ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோற்க வேண்டும் என்றே மகிந்த ராஜபக்­ச வேண்டுதல் செய்திருப்பார் என்பது இவர்களின் வாதமாக இருக்கலாம்.

எதுவாயினும் இரண்டும் ஒன்று என்று உணர்க. ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் வேண்டுதல் தொடர்பில் திருப்பதியான் என்ன முடிவு எடுத்திருப்பார் என்று நீங்கள் கேட்கலாம். அவ்வாறான கேள்வி நியாயமானதும் கூட.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசிக்காமல் விட்டால், வெங்கடேஸ்வரப் பெருமானுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மகிந்தவின் கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என்று திருப்பதியான் பதில் அனுப்புவார்.

மாறாக மைத்திரிபால சிறிசேனவும் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்து, சுவாமி! சிறை செல்லாமல் என்னைக் காத்தருள்க! என வேண்டினால் வெங்கடேஸ்வரர் பாடு அந்தோ கதிதான்.

முதல் வந்தவர் தனக்கு வெற்றி அல்லது மைத்திரிக்குத் தோல்வி என்று வேண்டுகிறார்.

இரண்டாவதாகத் தரிசனம் செய்ய வந்த மைத்திரிபால சுவாமி! சிறை செல்லாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருப்பது இரக்கப்பட வேண்டிய விடயம் .

மைத்திரி மட்டுமன்றி அவரோடு வந்தவர்களும் சுவாமி! ஜனவரி எட்டுக்குப் பிறகு எங்களுக்கு சிறை கிடைக்காவரம் தருக! என்றே வேண்டுதல் செய்கின்றனர்.

இந்த இடத்தில் திருப்பதியான் தில்லுமுல்லுப்பட வேண்டி இருக்கும். அதேநேரம் ஏழுமலையான் பார்த்தசாரதியாக அவதரித்து பாரதப் போரை நடத்துவதற்கு முன்னதாக; முதலாவதாக தன்னிடம் வந்த துரியோதனனுக்கு செய்த உதவியை விட, இரண்டாவதாக வந்த அருச்சுனனுக்கு அதிக உதவியைச் செய்து வெற்றியைக் கொடுத்தார்.

ஆக, இரண்டாவதாக தரிசனம் செய்ய வருகின்றவருக்கு உதவுகின்ற பண்பாடு கிருஷ்ண பரமாத்மாவிடம் இருப்பதால் மைத்திரிபால சிறிசேன திருப்பதியானை தரிசிக்கச் சென்றால் ஏழுமலையான் எடுக்கும் முடிவு பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது.

சில வேளைகளில் ஜனாதிபதித் தேர்தலோடு திருப்பதியான் இராம அவதாரத்தை எடுத்து அனுமானை இலங்கைக்கு அனுப்பி ஜனவரி எட்டாம் திகதிக்கு மறுநாள், முன்பு இலங்கைக்கு செய்ததைச் செய் என்று சொல்வாரோ! யார் அறிவார் அந்த ஏழுமலையானின் திருவிளையாடலை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum