இனவாத பிரசாரத்தின் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சி
Page 1 of 1
இனவாத பிரசாரத்தின் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சி
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரசாரங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிரணியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
தேர்தலுக்கு இன்னமும் 28 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஆளும் கட்சியும் பொது எதிரணியும் ஈடுபட உள்ளன. இந்த நிலையில் இனவாத ரீதியான பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. கூட்டமைப்பானது தமிழ் மக்களின் நலன் கருதிய முடிவினையே தாம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இதுவரை எந்தவித உதவியினையும் செய்யவில்லை. இதனால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்கையை நாம் உடனடியாக நிராகரிக்கப் போவதில்லை. மாறாக அவரது கோரிக்கை தொடர்பில் ஆழமாக பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இரண்டு தடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இன்னமும் தீர்மானமொன்றுக்கு வரவில்லை.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தனது தீர்மானத்தை அறிவிக்காதநிலையில் அரசாங்கத் தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன் எதிரணியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் நாடு மீண்டும் பிரிவினைக்கு செல்லவுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
கடந்த வாரம் தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோருவது தொடர்பில் இன்னமும் கட்சி தீர்மானிக்கவில்லை.
ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியினருடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே தெரிகின்றது என்று கூறியிருந்தார். பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி இவ்வாறு தெரிவிப்பதற்கு முதல் நாள் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.ஜே. செனவிரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கை குறித்து தெற்கு மக்கள் தெரிந்துகொண்டால் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் அதனை இரகசியமாக வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சந்திரிகாவும் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளமையின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படும்.
குறிப்பாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் சாத்தியமும் உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் பல அமைச்சர்களும் இத்தகைய குற்றச்சாட்டுக்ளை சுமத்திவருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு ஒருபடி மேல் போய் ஆளும் தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஐ.தே.க. தலைமையிலான மைத்திரிபால சிறிசேன, கூட்டணி இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இது நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்துக்கு தள்ளிவிடும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்த போது திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறான ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கவேயில்லை. தற்போது ஆளும் தரப்புக்கு மாறியவுடன் ஒப்பந்தம் குறித்து அவர் கூறிவருகின்றார்.
ஆளும் தரப்பில் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவோ மறைமுக ஆதரவினை பெறவேண்டிய அவசியமோ எமக்கு இல்லை.
பொய்யான கருத்துக்களைக் கூறி எதிரணியினர் மீது சேறுபூசவே ஆளும் கட்சியினர் முனைந்து வருகின்றனர்.
எமது கூட்டணிக்கு அனைவரது ஆதரவும் உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆளும் தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார்.
இவ்வாறு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
ஆனால் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.
கூட்டமைப்பு இன்னமும் எவருடனும் ஒப்பந்தம் செய்ததாக தெரியவில்லை.
அப்படித்தான் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது அரசியல் இலாபத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர யதார்த்தபூர்வமாக நோக்குகையில் அது தவறான நடைமுறையாகும்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
தேர்தலுக்கு இன்னமும் 28 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஆளும் கட்சியும் பொது எதிரணியும் ஈடுபட உள்ளன. இந்த நிலையில் இனவாத ரீதியான பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. கூட்டமைப்பானது தமிழ் மக்களின் நலன் கருதிய முடிவினையே தாம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இதுவரை எந்தவித உதவியினையும் செய்யவில்லை. இதனால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்கையை நாம் உடனடியாக நிராகரிக்கப் போவதில்லை. மாறாக அவரது கோரிக்கை தொடர்பில் ஆழமாக பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இரண்டு தடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இன்னமும் தீர்மானமொன்றுக்கு வரவில்லை.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தனது தீர்மானத்தை அறிவிக்காதநிலையில் அரசாங்கத் தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன் எதிரணியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் நாடு மீண்டும் பிரிவினைக்கு செல்லவுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
கடந்த வாரம் தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோருவது தொடர்பில் இன்னமும் கட்சி தீர்மானிக்கவில்லை.
ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியினருடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே தெரிகின்றது என்று கூறியிருந்தார். பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி இவ்வாறு தெரிவிப்பதற்கு முதல் நாள் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.ஜே. செனவிரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கை குறித்து தெற்கு மக்கள் தெரிந்துகொண்டால் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் அதனை இரகசியமாக வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சந்திரிகாவும் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளமையின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படும்.
குறிப்பாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் சாத்தியமும் உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் பல அமைச்சர்களும் இத்தகைய குற்றச்சாட்டுக்ளை சுமத்திவருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு ஒருபடி மேல் போய் ஆளும் தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஐ.தே.க. தலைமையிலான மைத்திரிபால சிறிசேன, கூட்டணி இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இது நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்துக்கு தள்ளிவிடும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்த போது திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறான ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கவேயில்லை. தற்போது ஆளும் தரப்புக்கு மாறியவுடன் ஒப்பந்தம் குறித்து அவர் கூறிவருகின்றார்.
ஆளும் தரப்பில் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவோ மறைமுக ஆதரவினை பெறவேண்டிய அவசியமோ எமக்கு இல்லை.
பொய்யான கருத்துக்களைக் கூறி எதிரணியினர் மீது சேறுபூசவே ஆளும் கட்சியினர் முனைந்து வருகின்றனர்.
எமது கூட்டணிக்கு அனைவரது ஆதரவும் உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆளும் தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார்.
இவ்வாறு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
ஆனால் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.
கூட்டமைப்பு இன்னமும் எவருடனும் ஒப்பந்தம் செய்ததாக தெரியவில்லை.
அப்படித்தான் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது அரசியல் இலாபத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர யதார்த்தபூர்வமாக நோக்குகையில் அது தவறான நடைமுறையாகும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!
» தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை
» தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!
» தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya