Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நீதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு -

Go down

நீதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு - Empty நீதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு -

Post by oviya Fri Dec 12, 2014 12:45 pm

நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பினால் நேற்று முன்தினம் இந்த மனு மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமான முறையில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த சட்டவிரோத சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டும்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

1981ம் ஆண்டு 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74(1) சரத்திற்கு அமைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் வேட்பாளரின் உருவம், இலச்சினை, கொடி போன்றனவற்றை காட்சிப்படுத்தும் கட்அவுட்கள், பெனர்கள் மற்றும் சுவரொட்டிகள் பொது இடங்களிலோ அல்லது தனியார் இடங்களிலோ காட்சிப்படுத்தக் கூடாது.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பாரியளவு கட்அவுட்கள், சுவரொட்டிகள், பெனர்கள் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது.

சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டும்.

கட்அவுட்கள், பெனர்கள் அகற்றுவது தொடர்பில் சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பின் சார்பில் திலக் பட்டியாகும்புர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர், கொழும்பு மாநகர மேயர், கொழும்பு மாநகரசபையின் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மனித உரிமைகள் மாநாடு
» ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum