ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் சாட்டையடி
Page 1 of 1
ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் சாட்டையடி
ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாட்டையடி வாங்கினார்கள். பெண்கள், சிறுமிகள் உருளு தண்டம் போட்டனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள அத்திபலகானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பூவோடு பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று 4–ந் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரிகள் ராஜா மற்றும் மணி ஆகியோர் பூவோடு எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சில பெண்கள் சுவாமி வந்து ஆடினார்கள்.
அதன் பிறகு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி கோவிலின் முன்பு நடந்தது. அப்போது கோவில் பூசாரிகள் ராஜா மற்றும் மணி ஆகியோர் சாட்டையடியை பக்தர்களுக்கு வழங்கினார்கள். பில்லி, சூனியம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலத்துடன் வாழ வேண்டியும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும்,
வேண்டுதலை நிறைவேற்றவும் நூற்றுக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சாட்டையடி வாங்கினார்கள். இது ஒரு ஐதீகம் ஆக இருந்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த சாட்டையடி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.
இந்த விழாவையொட்டி நாளை 5–ந் தேதி காலையில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், மாலையில் அழகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 6–ந் தேதி உடற் கூறு வண்டி வேடிக்கையும், எருது ஆட்டமும் நடைபெறுகிறது. 7–ந் தேதி இரவு கம்பம் எடுத்தலும், 8–ந் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.
இன்னிசை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா செல்வராஜு, நிர்வாகக் குழு தலைவர் ராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள அத்திபலகானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பூவோடு பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று 4–ந் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரிகள் ராஜா மற்றும் மணி ஆகியோர் பூவோடு எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சில பெண்கள் சுவாமி வந்து ஆடினார்கள்.
அதன் பிறகு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி கோவிலின் முன்பு நடந்தது. அப்போது கோவில் பூசாரிகள் ராஜா மற்றும் மணி ஆகியோர் சாட்டையடியை பக்தர்களுக்கு வழங்கினார்கள். பில்லி, சூனியம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலத்துடன் வாழ வேண்டியும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும்,
வேண்டுதலை நிறைவேற்றவும் நூற்றுக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சாட்டையடி வாங்கினார்கள். இது ஒரு ஐதீகம் ஆக இருந்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த சாட்டையடி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.
இந்த விழாவையொட்டி நாளை 5–ந் தேதி காலையில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், மாலையில் அழகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 6–ந் தேதி உடற் கூறு வண்டி வேடிக்கையும், எருது ஆட்டமும் நடைபெறுகிறது. 7–ந் தேதி இரவு கம்பம் எடுத்தலும், 8–ந் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.
இன்னிசை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா செல்வராஜு, நிர்வாகக் குழு தலைவர் ராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஒரத்தநாடு அருகே குன்னம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
» குடவாசல் அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» காட்பாடி அருகே சிவன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருவிழாவில்
» குடவாசல் அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» காட்பாடி அருகே சிவன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருவிழாவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya