Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மருதமலை கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் எழுதினர்

Go down

மருதமலை கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் எழுதினர் Empty மருதமலை கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் எழுதினர்

Post by oviya Mon Dec 01, 2014 1:57 pm

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பக்தர்களால் 7–வது படை வீடு என்று போற்றப்படும் இந்த கோவிலில் கடந்த 24–ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் முருகன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. அப்போது முருகப்பெருமான் தனது வேலால் சூரபத்மன் தலையை துண்டித்து வதம் செய்தார்.

அந்த சமயத்தில் பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என்று பக்தி கோஷமிட்டனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் நீண்ட வரிசையில் காத்து நின்று முருகனை தரிசனம் செய்தனர். விழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யான விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு கோபூஜை நடந்தது.

8.30 மணிக்கு யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்யாகம், கலசங்கள் ஆவாகனம் மற்றும் வேள்வி நடைபெற்றது.

பின்னர் சுப்பிரமணியசாமி, வள்ளி–தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சுப்பிரமணியசாமி, வள்ளி–தெய்வானையுடன் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

இன்று நடைபெற்ற திருக்கல்யாண திருவிழாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியசாமியை தரிசனம் செய்தனர். பின்னர் திருக்கல்யாண மொய் எழுதினர்.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகதர்கள் மருதமலைக்கு சென்று வர வசதியாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» கரியமாணிக்கம் ராமர் கோவிலில் ராமர்–சீதா திருக்கல்யாணம்
» அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்
» திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிகிறார்கள்
» சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum