Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 மூலவர்கள் 5 உற்சவர்கள்

Go down

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 மூலவர்கள் 5 உற்சவர்கள் Empty திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 மூலவர்கள் 5 உற்சவர்கள்

Post by oviya Mon Dec 01, 2014 1:58 pm

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் ஒரே தெய்வமான முருகன் 2 பெயர்களில் மூலவராக உள்ளார். கிழக்கே பார்த்து அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமியும், தெற்கே பார்த்து அருள்பாலிக்கும் சண்முகரும் திருச்செந்தூர் கோவிலின் மூலவர்கள் ஆவார்கள்.

இதில் சுப்பிரமணிய சுவாமி தவக்கோலத்தில் கையில் உத்ராட்சை மாலையுடன் காட்சி அளிக்கிறார். வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் காட்சி அளிக்கிறார். ஆறுமுகம், பன்னிரெண்டு கரத்துடன் அவர் தோற்றம் அளிக்கிறார். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு கேரள முறைப்படி 9 கால பூஜை செய்யப்படுகிறது.

அவர் துறவுக் கோலத்தில் இருப்பதால் படைக்கும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரை பொங்கல் தான் நிவேதனமாக படைக்கப்படுகிறது. சுத்தான்னமும், உப்பில்லாக் காய்களும் படைக்கப்படும்.

அவர் தினமும் பஞ்சலிங்கங்களுக்கு பூஜை செய்வதாக கூறப்படுகிறது. சண்முகர் இல்லறக் கோலத்தில் இருப்பதால் அவருக்கு அனைத்து வகைச் சோறுகளும், பல வகைப் பலகாரங்களும் படைக்கப்படுகின்றன.

ஆறுமுக அர்ச்சனை முடிந்ததும் சுவாமிக்கு பால் பாயாசம், தேங்காய்ச்சோறு, புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் ஆகியவை இடம் பெறும். மேலும் சண்முகருக்கு தோசையும், பாசிப்பருப்பு கஞ்சியும் நாகர்கோவில் கோட்டாறு செட்டியார் முறைப்படி நிவேதனமாக படைக்கப்படுகிறது.

திருச்செந்தூர் கோவிலில் ஐந்து உற்சவ மூர்த்திகள் உள்ளனர். சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விகடங்க பெருமாள், அலைவாய் உகந்த பெருமாள், நடராஜர் ஆகியோர் உற்சவ மூர்த்திகள் ஆவர். அலைவாய் உகந்த பெருமாள் நவராத்திரி விழா காலங்களில் 9 நாட்களும் அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மூலவரான சுப்பிரமணிய சுவாமியை கடற்கரையாண்டி என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். கந்த சஷ்டி யாகசாலை முன்பு மூலவரான சுப்பிரமணியர், பாலசுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum