Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


வெற்றி தரும் கஜலட்சுமி விரதம்

Go down

வெற்றி தரும் கஜலட்சுமி விரதம் Empty வெற்றி தரும் கஜலட்சுமி விரதம்

Post by oviya Sun Nov 30, 2014 1:05 pm

புதிதாக ஒரு தொழில் தொடங்கவோ, வேலைக்குச் சேரவோ, படிக்கவோ, வீடு கட்டவோ, கார் வாங்கவோ நகை வாங்கவோ, பொருட்கள் வாங்கவோ முயல்பவர், அதில் வெற்றி பெற, அஷ்டலட்சுமிகளுள் ஒருவரான கஜலட்சுமியை விரதமிருந்து வழிபட வேண்டும்.

கஜலட்சுமியை, சகல தோஷங்களையும் நீக்கி அரச போகத்தைத் தரும் ராஜலட்சுமி என்றும் குறிப்பிடுவர். புதிய முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கும் நாள் வளர்பிறையாகவோ, கரிநாள் மற்றும் அஷ்டமி, நவமி, திதி ஆகியன இல்லாத நாளாகவோ பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அன்றைய தினம் விரதமிருந்து வீட்டில் உள்ள பூஜை அறையிலோ வேறு அறையிலோ பீடம் அமைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு முகமாக அமைக்கப்பட்ட அப்பீடத்தில் சதுரமாக நெல் பரப்பி, அதிலே ஒரு தட்டில் பச்சரிசி பரப்பி, கலசம் அமைக்க வேண்டும்.

ஐம்முக விளக்கோ காமாட்சி விளக்கோ வைக்க வேண்டும். ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி, அதன் மீது மஞ்சள் அல்லது பசுஞ்சாணத்தில் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். விளக்கிற்கு நெய்விட்டு ஏற்ற வேண்டும். செந்தாமரை, மல்லிகை, சாமந்தி, மரிக்கொழுந்து ஆகியவற்றால் கலசத்தையும் விளக்கையும் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

இளநீர், பால், கல்கண்டு, பால்பாயாசம், பழங்கள், அவல், பொரிகடலை, தேங்காய், ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம் ஆகியவற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பூசணிக்காய் வாங்க வேண்டும். அதில் மேல் பக்கம் சதுரமாக நறுக்கி எடுக்க வேண்டும்.

அதில் மஞ்சள் சுண்ணாம்பு அல்லது செந்நிறக் குங்குமம் ஆகியவற்றை இட்டுச் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும். அவற்றுடன் சில்லறைக் காசுகளையும் இட்டு, மூடி, பூஜை பீடத்தின் அருகே வைக்க வேண்டும். நான்கு எலுமிச்சம்பழத்தை பூஜை மேடையில், கலச பாதத்தில் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகருக்கு அருகம்புல்லை அர்ச்சனை செய்தபடி அஷ்டோத்ர சத நாமாவளி சொல்ல வேண்டும். பிறகு, கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். திருவிளக்கு ஸ்தோத்திரங்களைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடித்து திருவிளக்குக் கற்பூர தூப தீபம் காட்ட வேண்டும். திருவிளக்கை வணங்கிய பிறகு, கலசத்திற்குக் கற்பூரம் காட்டிவிட்டு, கஜலட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி கூறியபடி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்து கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். வேறு ஒருவரிடம் ஒரு பூசணிக்காயைக் கொடுக்க வேண்டும். அதில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி, சேர்ந்து நிற்கும் வீட்டார் எல்லாரையும் மூன்று முறை சுற்றி வருமாறு சொல்ல வேண்டும்.

பின்பு வீடு முழுவதும் பூசணிக்காயைச் சுற்றி வரச் செய்து, முச்சந்தியில் உடைக்கச் சொல்ல வேண்டும். எலுமிச்சம் பழத்தையும் இதேபோலச் சுற்றச் செய்து, வாயிலில் வைத்து, காலால் நசுக்கி, திசைக்கு ஒரு பழமாக எறிந்து விட வேண்டும். மீண்டும் பீடத்தில் கலசத்திற்குக் கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum