Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் “டும்” தான்: ஜனாதிபதி

Go down

ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் “டும்” தான்: ஜனாதிபதி Empty ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் “டும்” தான்: ஜனாதிபதி

Post by oviya Fri Dec 05, 2014 12:21 pm

அமைச்சரவைக்குள் தமது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைக்காத நபர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சிக்கு சென்று கருத்துக்களை வெளியிடுவது கவலைக்குரிய விடயம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்பாக தன்னுடன் அல்லது அமைச்சரவையில் எதனையும் பேசாது அமைதியாக இருந்த உறுப்பினர்கள் தற்போது எதிரணியின் மேடையில் இருந்து கொண்டு தன் மீது குற்றம் சுமத்துவது அநீதியானது எனவும் ஜனாதிபதி கூறினார்.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் பத்திரிகை ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களில் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் முகாம் தொடர்பில் ஊடக பிரதானிகள் ஜனாதிபதியிடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தனக்கு தெரிந்த வகையில், ரணில் விக்ரமசிங்க வலுவான தலைவர் எனக் கூற முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்முறை தன்னுடன் போட்டிக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது குறித்து ஊடக பிரதானிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, பல்வேறு நபர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பேனர்கள், கட்அவுட்களை காட்சிக்கு வைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்களை பாதுகாக்க கடும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் சில நபர்களின் கோப்புகள் பற்றி தான் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களையே தான் கோப்புகள் என கூறியதாகவும் இதனை தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா ஒற்றுமையாகும். ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் டும் தான். என்னோடு போட்டியிடத் தகுதிவாய்ந்தவர் ரணில் என்றே நான் நினைக்கிறேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த
» ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum