Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Go down

ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு Empty ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Post by oviya Sat Dec 06, 2014 11:25 am

ஈரோடு ரெயில்வே காலனியில் சித்தி விநாயகர் கோவில் அருகே சீரடி சாய்பாபா கோவில் புதிதாக கட்டப்பட்டு வந்தது. மிகவும் கம்பீரமான தோற்றத்தில் அமைதியான இடத்தில் கட்டி முடிக்கப்பட்ட சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

12 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை முதல் கால வேள்வி பூஜை நடந்தது. தத்ரூபமான தோற்றத்தில் பளிங்கு கல்லால் ஆன சாய்பாபா உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிலைக்கு விஷேச பூஜையும் நடந்தது.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 2–ம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு திருக்குடங்கள் உலா வந்தது. 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ரெயில்வே காலனி, கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சாஸ்திரிநகர், நாடார்மேடு, கள்ளுக்கடை மேடு, பெரியார் நகர் மற்றும் ஈரோடு நகான் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாய் பாபாவை வழிபட்டனர்.

விழாவின்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டதும் மெய்சிலிர்த்த பக்தர்கள் சாய்பாபா... சாய்பாபா... என பக்தி கோஷமிட்டனர். கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட அன்னதான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

கும்பாபிஷேக விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum