லட்சியம் தரும் லட்சுமி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
லட்சியம் தரும் லட்சுமி
லட்சுமி என்றால் சகல செல்வங்கள் வரும் வழி என்று பொருள். மேலும் அதிர்ஷ்டம், செல்வம், வளம், செழிப்பு, நற்பேறு என்று பல பொருள்கள் லட்சுமியை குறிக்கின்றன.
உலகில் உள்ள சகல வகை பொருட்களிலிருந்து நாம் பெறும் பயன்கள், பெறும் செல்வங்கள் அனைத்தும் லட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும். லட்சுமி என்றால் ஸ்ரீ, சோபை, சம்பத்து, சித்தி, புத்தி, கீர்த்தி, ஐஸ்வர்யம் என்று பல அர்த்தங்கள் உண்டு.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதெல்லாம் லட்சுமி அருளால்தான் நடக்கிறது. இவற்றை உடைய தன்மையே ``லட்சுமிகரம்'' எனப்படும். இவற்றைப் பெற்றுள்ள பாக்கியசாலியே ``லட்சுமி கடாட்சம் உள்ளவன்'' என்று அழைக்கப்படுவான்.
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ எனும் மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும். அதற்கு நாம் அவளை தினமும் மனமுருகி பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.
லட்சுமி என்பது ஒரு சமஸ்கிருத சொல்லாகும். லட்சியம், லட்சணம் என்ற சொற்கள் போன்றதே லட்சுமி என்ற சொல்லும். லட்சியம் நம்மிடம் இருந்தால் தான் அந்த லட்சுமியை அடைய முடியும்.
பெரும் செல்வந்தனாக உலகில் வாழ முடியும். வீடு பேற்றின்பத்தையும் அடைய முடியும். அதனால் உயர்ந்த லட்சியம் உடையவர்களால் மட்டுமே அடையப்படக்கூடியவள் என்ற பொருளிலும் அவள் லட்சுமி என்ற பெயர் பெறுகிறாள்.
அதுமட்டுமல்ல சாமுத்ரிகா லட்சணப்படி சகல விதமான அழகும் பொருந்தியவள் ஸ்ரீமகாலட்சுமி. அதனால் லட்சணங்கள் பொருந்தியவள் லட்சுமி என்று கூறுவர். அதுமட்டுமல்ல மிக அழகானப் பெண்களை ``பெண் மகாலட்சுமி மாதிரி அழகாக இருக்கிறாள்'' என்று கூறுவதும் இதனால்தான்.
பொதுவாக மகாலட்சுமி, தம் பக்தர்களுக்கு உலகில் உள்ள சகல சவுபாக்கி யங்களை குறைவின்றி கொடுக்கிறாள். அதோடு பேரின்பமாகிய முக்தி, மோட்சம் எனும் வீடுபேற்றினைப்பெற அவ்வழிகளில் முன்னேறும் பக்தர்களுக்கு மோட்ச இன்பத்தையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு, அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அள்ளி அள்ளித்தரும் வள்ளலாகத் திகழ்கிறாள்.
உலகில் உள்ள சகல வகை பொருட்களிலிருந்து நாம் பெறும் பயன்கள், பெறும் செல்வங்கள் அனைத்தும் லட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும். லட்சுமி என்றால் ஸ்ரீ, சோபை, சம்பத்து, சித்தி, புத்தி, கீர்த்தி, ஐஸ்வர்யம் என்று பல அர்த்தங்கள் உண்டு.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதெல்லாம் லட்சுமி அருளால்தான் நடக்கிறது. இவற்றை உடைய தன்மையே ``லட்சுமிகரம்'' எனப்படும். இவற்றைப் பெற்றுள்ள பாக்கியசாலியே ``லட்சுமி கடாட்சம் உள்ளவன்'' என்று அழைக்கப்படுவான்.
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ எனும் மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும். அதற்கு நாம் அவளை தினமும் மனமுருகி பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.
லட்சுமி என்பது ஒரு சமஸ்கிருத சொல்லாகும். லட்சியம், லட்சணம் என்ற சொற்கள் போன்றதே லட்சுமி என்ற சொல்லும். லட்சியம் நம்மிடம் இருந்தால் தான் அந்த லட்சுமியை அடைய முடியும்.
பெரும் செல்வந்தனாக உலகில் வாழ முடியும். வீடு பேற்றின்பத்தையும் அடைய முடியும். அதனால் உயர்ந்த லட்சியம் உடையவர்களால் மட்டுமே அடையப்படக்கூடியவள் என்ற பொருளிலும் அவள் லட்சுமி என்ற பெயர் பெறுகிறாள்.
அதுமட்டுமல்ல சாமுத்ரிகா லட்சணப்படி சகல விதமான அழகும் பொருந்தியவள் ஸ்ரீமகாலட்சுமி. அதனால் லட்சணங்கள் பொருந்தியவள் லட்சுமி என்று கூறுவர். அதுமட்டுமல்ல மிக அழகானப் பெண்களை ``பெண் மகாலட்சுமி மாதிரி அழகாக இருக்கிறாள்'' என்று கூறுவதும் இதனால்தான்.
பொதுவாக மகாலட்சுமி, தம் பக்தர்களுக்கு உலகில் உள்ள சகல சவுபாக்கி யங்களை குறைவின்றி கொடுக்கிறாள். அதோடு பேரின்பமாகிய முக்தி, மோட்சம் எனும் வீடுபேற்றினைப்பெற அவ்வழிகளில் முன்னேறும் பக்தர்களுக்கு மோட்ச இன்பத்தையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு, அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அள்ளி அள்ளித்தரும் வள்ளலாகத் திகழ்கிறாள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» லட்சுமி கடாட்சம் தரும் பைரவாஷ்டமி
» குழந்தை செல்வம் தரும் சந்தான லட்சுமி விரதம்
» புத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்
» வாகன யோகம் தரும் லட்சுமி தேர் வழிபாடு
» சௌபாக்கிய லட்சுமி மந்திரம்
» குழந்தை செல்வம் தரும் சந்தான லட்சுமி விரதம்
» புத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்
» வாகன யோகம் தரும் லட்சுமி தேர் வழிபாடு
» சௌபாக்கிய லட்சுமி மந்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya