Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Go down

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம் Empty திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Post by oviya Sun Nov 30, 2014 1:48 pm

காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவிலில் சனிபகவான் தனியாக சன்னதி கொண்டு, கிழக்கு நோக்கிய நிலையில் அபயஹஸ்த முத்திரையுடன் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சனிதோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்றது திருநள்ளாறு தலம் மட்டுமே ஆகும். இங்குள்ள நளதீர்த்தம் மிகவும் விசேஷ மானதாகும். நளதீர்த்தத்தில் சனிகிரகத்திலிருந்து நேரடியாக கதிர்வீச்சுகள் இறங்குவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுள், வியாபார விருத்தி, உத்யோக உயர்வு, காரிய வெற்றிகள் கிடைக்கும். நல்ல உடல் ஆரோக்கியமும் கிட்டும். சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது இங்கு ‘சனிப்பெயர்ச்சி விழா’ வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு நடைபெறுகிறது. அப்பொழுது சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியினால் மிதுனம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்கள் கிட்டும்.

தனுசு, விருச்சிகம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமும், மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலமும், ரிஷப ராசிக்காரர்களுக்கு சப்தம கண்டக சனி காலமும், சிம்ம ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலமும் தொடங்குகிறது. கும்பம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சமமான பலன்கள் கிட்டும்.

இருந்தாலும் அனைத்து ராசிக்காரர்களும் சனிபகவானை தரிசனம் செய்வது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். சனிப்பெயர்ச்சி தினத்தன்று பகவானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி பகவானை தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தானமும் இணைந்து செய்து வருகின்றன.

தற்பொழுது பக்தர்களின் வசதிக்காக நான்கு விதமான வரிசைகள் அமைக்கப்பட்டு பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோன்று நளதீர்த்தம் செல்லும் வழியிலும் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum