பார்வையை மீட்டுத் தந்த பரமன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பார்வையை மீட்டுத் தந்த பரமன்
சீர்மிகு செல்வத் திருவாரூரில் பூங்கோயில், அறநெறி என்னும் அசலேசம், பரவையுண் மண்டலி ஆகிய மூன்று தேவாரத் தலங்கள் உள்ளன. இவற்றுள் பூங்கோயிலும் அறநெறியும் தியாகராஜர் திருக்கோயிலினுள்ளேயே அமைந்துள்ளன. பரவையுண் மண்டலி என்கிற துர்வாசர் கோயில், தியாகராஜர் திருக்கோயிலுக்கு வெளியே, கோயிலை ஒட்டிய கீழ வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர். ஆனால், தூவாயர் என்றே பெயரே புராணங்களில் காணப்படுகிறது. இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது.
பரவை என்பது கடல். மண்தளி என்பது மண்கோயில். கடலை உட்கொண்ட மண்கோயில் என்ற அடிப்படையில் இக்கோயிலுக்குப் பரவையுண் மண்டலி என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் வருண பகவான் சினம் கொண்டு திருவாரூரை அழிக்கும்படி கடலை ஏவினார். ஊரை அழிக்கக் கடல் பொங்கி எழுந்தபோது, அந்த நீரை இக்கோயிலில் உள்ள சிவபெருமான் அருந்தி (உண்டு) நீரை வற்றச் செய்தார். கடல் நீர் வற்றிப் போவதற்குக் காரணமாக அமைந்ததால், இக்கோயில் பரவையுண் மண்டலி என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் மண்ணால் அமைக் கப்பட்டிருந்த இக்கோயில், பிற்காலத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் பெருமான், தூவாயர் என்பதை சுந்தரர் பாடல் மூலம் அறிய முடிகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர் மேல் காதல் கொண்டு அவர் கேட்டுக் கொண்டபடி அவரை விட்டுப் பிரிவதில்லை என்று இறைவன் திருமுன்னர் உறுதி மொழி கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், சிலகாலம் சென்று தியாகேசர் மேல் கொண்ட பக்தியால், அவரை தரிசிக்க ஆவல் கொண்டு தாம் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை மீறி திருவாரூர் தலத்திற்கு பயணம் மேற்கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதுமே அவரது கண்கள் இரண்டும் ஒளி இழந்தன. பார்வை இழந்த சுந்தரர் மிகுந்த சிரமத்துடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார்.
காஞ்சிபுரம் சென்றபோது அத்தலத்து இறைவனைப் பாடி ஒரு கண் பார்வை பெற்றார். பிற தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் முதலில் பரவையுண் மண்டலிக்கு (துர்வாசர் கோயில்) வந்து அங்குள்ள புனித
தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு,
‘தூவாயா! தொண்டு செய்வார் படுதுக்கங்கள்
காவாயா! கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லு வேற்கு
ஆவாஎன் பரவையுண் மண்டலி அம்மானே’
எனத் தொடங்கி பத்து பாடல்களை மனமுருகப் பாடினார். தூவாயர் அருளால் மற்றொரு கண் பார்வையும் சுந்தரருக்குக் கிட்டியது. ஒரே பிராகாரத்தை கொண்ட இத்திருக்கோயிலில் இறைவி பஞ்சின் மெல்லடியாளுக்கும், சனீஸ்வர பகவானுக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. இங்கு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானையும் தரிசித்து அவனருளும் பெறலாம்.
பரவை என்பது கடல். மண்தளி என்பது மண்கோயில். கடலை உட்கொண்ட மண்கோயில் என்ற அடிப்படையில் இக்கோயிலுக்குப் பரவையுண் மண்டலி என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் வருண பகவான் சினம் கொண்டு திருவாரூரை அழிக்கும்படி கடலை ஏவினார். ஊரை அழிக்கக் கடல் பொங்கி எழுந்தபோது, அந்த நீரை இக்கோயிலில் உள்ள சிவபெருமான் அருந்தி (உண்டு) நீரை வற்றச் செய்தார். கடல் நீர் வற்றிப் போவதற்குக் காரணமாக அமைந்ததால், இக்கோயில் பரவையுண் மண்டலி என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் மண்ணால் அமைக் கப்பட்டிருந்த இக்கோயில், பிற்காலத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் பெருமான், தூவாயர் என்பதை சுந்தரர் பாடல் மூலம் அறிய முடிகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர் மேல் காதல் கொண்டு அவர் கேட்டுக் கொண்டபடி அவரை விட்டுப் பிரிவதில்லை என்று இறைவன் திருமுன்னர் உறுதி மொழி கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், சிலகாலம் சென்று தியாகேசர் மேல் கொண்ட பக்தியால், அவரை தரிசிக்க ஆவல் கொண்டு தாம் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை மீறி திருவாரூர் தலத்திற்கு பயணம் மேற்கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதுமே அவரது கண்கள் இரண்டும் ஒளி இழந்தன. பார்வை இழந்த சுந்தரர் மிகுந்த சிரமத்துடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார்.
காஞ்சிபுரம் சென்றபோது அத்தலத்து இறைவனைப் பாடி ஒரு கண் பார்வை பெற்றார். பிற தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் முதலில் பரவையுண் மண்டலிக்கு (துர்வாசர் கோயில்) வந்து அங்குள்ள புனித
தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு,
‘தூவாயா! தொண்டு செய்வார் படுதுக்கங்கள்
காவாயா! கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லு வேற்கு
ஆவாஎன் பரவையுண் மண்டலி அம்மானே’
எனத் தொடங்கி பத்து பாடல்களை மனமுருகப் பாடினார். தூவாயர் அருளால் மற்றொரு கண் பார்வையும் சுந்தரருக்குக் கிட்டியது. ஒரே பிராகாரத்தை கொண்ட இத்திருக்கோயிலில் இறைவி பஞ்சின் மெல்லடியாளுக்கும், சனீஸ்வர பகவானுக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. இங்கு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானையும் தரிசித்து அவனருளும் பெறலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பிரம்மஹத்தி தோஷம் போக்கிய பரமன்
» கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி
» இழந்த பதவியை மீட்டுத் தரும் வியாசர் பூஜித்த ஈசன்
» கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி
» இழந்த பதவியை மீட்டுத் தரும் வியாசர் பூஜித்த ஈசன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya