கன்னிமாருடன் கோயில் கொண்ட காமாட்சி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கன்னிமாருடன் கோயில் கொண்ட காமாட்சி
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியின் தென்புறத்தில் ஓடிக்கொண்டிருந்த காவேரி நதி வற்றி இருந்தது. ஆற்றிலிருந்து மணல் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓரிடத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த கன்னிமார் எழுவர் சிலைகள் தென்பட்டன. உடனே அவற்றை அருகிலிருந்த வன்னி மற்றும் வேப்ப மரங்கள் அடர்ந்த பகுதியில் மேடான ஓரிடத்தில் வைத்து அபிஷேக ஆராதனைகள் செய்தார்கள். தம் குறை களையும் மகிழ்ச்சியில் மக்கள், அவர்களுக்கு சிறிய கோயில் கட்டினர். நாளடைவில் கோயில் விஸ்தரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இதற்கிடையில் திருச்சியில் காஞ்சி காமாட்சிக்கு ஒரு கோயில் கட்ட விரும்பிய சிலர், காஞ்சிக்கு சென்று, ஐம்பொன் காமாட்சி திருவுருவச்சிலை தயார் செய்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அச்சிலையை வைத்து பல நாட்கள் பூஜை செய்து செய்து, பிறகு, திருச்சிக்கு அந்த சிலையுடன் பயணமானார்கள். வழியில் முசிறியில், களைப்படைந்த பக்தர்கள் காமாட்சியின் திருவுருவச் சிலையை அங்கிருந்த கன்னிமார் கோயிலில் வைத்து விட்டு காவேரியில் நீராடினார்கள். பிறகு, அங்கேயே காஞ்சி காமாட்சிக்கு உச்சிகால பூஜையும் செய்தார்கள். பின் புறப்பட தீர்மானித்த அவர்கள், காமாட்சியின் சிலையை எடுக்க முற்பட்டபோது, சிலையை அசைக்கக்கூட முடியவில்லை. அப்போது ஒரு மூதாட்டிக்கு அருள் வந்து, “இந்த இடத்திலேயே நான் தங்கிவிடுகிறேன். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வந்து என்னை வழிபடுங்கள்.
நீங்கள் கேட்கும் வரத்தை அளிக்கிறேன்” என்று கூறினாள். பக்தர்களும் அம்பாளின் அருளாணைக்கேற்ப சிலையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர். அன்றிலிருந்து காமாட்சி இங்கே அனைவருக்கும் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் வழிபட்ட பின்னர், தென்பகுதியில் உள்ள ஐயர் மலையை தரிசித்தால் பெரும் புண்ணியம் என்கிறார்கள். கன்னிமார்களை வழிபடுவதால் திருமணத் தடைகள் நீங்கும். சுமங்கலிகள் நீடூழி வாழ்வர். காஞ்சி காமாட்சியின் அருளால் செல்வ வளம் பெருகும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது முசிறி. அங்கிருந்து முசிறி கைகாட்டி என்னும் பகுதியை அடைந்தால், ஒரு கி.மீ. தொலைவில் கன்னிமார் கோயிலைக் காணலாம்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அச்சிலையை வைத்து பல நாட்கள் பூஜை செய்து செய்து, பிறகு, திருச்சிக்கு அந்த சிலையுடன் பயணமானார்கள். வழியில் முசிறியில், களைப்படைந்த பக்தர்கள் காமாட்சியின் திருவுருவச் சிலையை அங்கிருந்த கன்னிமார் கோயிலில் வைத்து விட்டு காவேரியில் நீராடினார்கள். பிறகு, அங்கேயே காஞ்சி காமாட்சிக்கு உச்சிகால பூஜையும் செய்தார்கள். பின் புறப்பட தீர்மானித்த அவர்கள், காமாட்சியின் சிலையை எடுக்க முற்பட்டபோது, சிலையை அசைக்கக்கூட முடியவில்லை. அப்போது ஒரு மூதாட்டிக்கு அருள் வந்து, “இந்த இடத்திலேயே நான் தங்கிவிடுகிறேன். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வந்து என்னை வழிபடுங்கள்.
நீங்கள் கேட்கும் வரத்தை அளிக்கிறேன்” என்று கூறினாள். பக்தர்களும் அம்பாளின் அருளாணைக்கேற்ப சிலையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர். அன்றிலிருந்து காமாட்சி இங்கே அனைவருக்கும் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் வழிபட்ட பின்னர், தென்பகுதியில் உள்ள ஐயர் மலையை தரிசித்தால் பெரும் புண்ணியம் என்கிறார்கள். கன்னிமார்களை வழிபடுவதால் திருமணத் தடைகள் நீங்கும். சுமங்கலிகள் நீடூழி வாழ்வர். காஞ்சி காமாட்சியின் அருளால் செல்வ வளம் பெருகும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது முசிறி. அங்கிருந்து முசிறி கைகாட்டி என்னும் பகுதியை அடைந்தால், ஒரு கி.மீ. தொலைவில் கன்னிமார் கோயிலைக் காணலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கனவில் வந்து கோயில் கொண்ட சுந்தரமகாலிங்கம்
» தேடி வந்து கோயில் கொண்ட காளி
» கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்!
» முதலும் முடிவும் கொண்ட இறைவனின் படம்
» விஷ்ணுவைப் போல தோற்றம் கொண்ட புதன் பகவான்
» தேடி வந்து கோயில் கொண்ட காளி
» கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்!
» முதலும் முடிவும் கொண்ட இறைவனின் படம்
» விஷ்ணுவைப் போல தோற்றம் கொண்ட புதன் பகவான்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya