கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
சென்னை: மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் வீதியுலாவும் நடந்தது. விழாவில் நேற்று காலை திருக்கூத்தப்பெருமான் திருக்காட்சியும், ஐந்திருமேனிகள் வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது.
மாலை 6.30 மணிக்கு உமாதேவியார் புன்னை மரத்தடியில் மயில் உருவில் சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும், அவருக்கு சிவன் காட்சியளித்தலும் நடந்தது. இதையடுத்து உமாதேவி- சிவன் திருக்கல்யாணம் நேற்றிரவு 10 மணிக்கு நடந்தது. தொடர்ந்து தம்பதிகள் கயிலாய வாகனத்தில் எழுந்தருளினர். இதையடுத்து பெருவிழா கொடி இறக்கம் செய்யப்பட்டது. சண்டேஸ்வரர் விழா நிறைவு செய்யப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். உமாதேவிக்கு சிவன் மங்கல நாண் அணிவிக்கும்போது கூடியிருந்த பக்தர்கள் மலர் தூவி வணங்கினர். இன்று காலை உமாமகேஸ்வரர் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து பந்தம்பறி விழாவும், நாளை நிறைவு திருமுழுக்கும் நடக்கிறது. இரவு விடையாற்றி தொடங்குகிறது. இதையொட்டி 29 ம் தேதியிலிருந்து ஏப்ரல் 7ம் தேதி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தி சொற்பொழிவுகளும், 29 ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடன நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மாலை 6.30 மணிக்கு உமாதேவியார் புன்னை மரத்தடியில் மயில் உருவில் சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும், அவருக்கு சிவன் காட்சியளித்தலும் நடந்தது. இதையடுத்து உமாதேவி- சிவன் திருக்கல்யாணம் நேற்றிரவு 10 மணிக்கு நடந்தது. தொடர்ந்து தம்பதிகள் கயிலாய வாகனத்தில் எழுந்தருளினர். இதையடுத்து பெருவிழா கொடி இறக்கம் செய்யப்பட்டது. சண்டேஸ்வரர் விழா நிறைவு செய்யப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். உமாதேவிக்கு சிவன் மங்கல நாண் அணிவிக்கும்போது கூடியிருந்த பக்தர்கள் மலர் தூவி வணங்கினர். இன்று காலை உமாமகேஸ்வரர் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து பந்தம்பறி விழாவும், நாளை நிறைவு திருமுழுக்கும் நடக்கிறது. இரவு விடையாற்றி தொடங்குகிறது. இதையொட்டி 29 ம் தேதியிலிருந்து ஏப்ரல் 7ம் தேதி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தி சொற்பொழிவுகளும், 29 ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடன நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya