கபாலீஸ்வரர் கோயிலில் உமா மகேஸ்வரர் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கபாலீஸ்வரர் கோயிலில் உமா மகேஸ்வரர் தரிசனம்
சென்னை: சென்னை மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் உமா மகேஸ்வரர் தரிசன காட்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். சென்னை மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17 ம் தேதி கோலவிழியம்மனுக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. 24ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலாவும் நடந்தது. நிகழ்ச்சியில் நேற்று இரவு புன்னை மரத்தடியில் உமா தேவியார் மயில் உருவில் சிவலிங்கத்தை வழிபடுதலும், அவருக்கு சிவன் காட்சியளித்தலும், தொடர்ந்து இருவருக்கும் திருக்கல்யாணம், கயிலாய ஊர்தியில் காட்சியளித்தல், பெருவிழா கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று காலை உமாமகேஸ்வரர் தரிசன காட்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த தம்பதியர் உமாமகேஸ்வரராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். விழாவில் இன்று இரவு பந்தம் பறி விழா நடக்கிறது. நாளை காலை விழா நிறைவு திருமுழுக்கு நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை முதல் விடையாற்றி விழா தொடங்குகிறது.
விடையாற்றியை முன்னிட்டு 29 ம் தேதியிலிருந்து ஏப்ரல் 7 ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை சொற்பொழிவுகள் நடக்கின்றன. 29ம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 வரை தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதில் கதக் நடனம், வயலின், கஞ்சிரா, வாய்ப்பாட்டு மிருதங்கம் உள்ளிட்ட கச்சேரிகளும் நடக்கின்றன.
இன்று காலை உமாமகேஸ்வரர் தரிசன காட்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த தம்பதியர் உமாமகேஸ்வரராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். விழாவில் இன்று இரவு பந்தம் பறி விழா நடக்கிறது. நாளை காலை விழா நிறைவு திருமுழுக்கு நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை முதல் விடையாற்றி விழா தொடங்குகிறது.
விடையாற்றியை முன்னிட்டு 29 ம் தேதியிலிருந்து ஏப்ரல் 7 ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை சொற்பொழிவுகள் நடக்கின்றன. 29ம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 வரை தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதில் கதக் நடனம், வயலின், கஞ்சிரா, வாய்ப்பாட்டு மிருதங்கம் உள்ளிட்ட கச்சேரிகளும் நடக்கின்றன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya