Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்

Go down

அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன் Empty அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்

Post by oviya Sun Dec 07, 2014 10:40 am

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணத்திற்கமைய பசுமைத்தேசம் வீட்டை சுற்றி ஒரு விளைச்சல் என்ற விதைதானியம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு விதைதானியப்பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று புதுமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்,கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா, அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக்கிளையின் செயலாளர் கதிர்மகன் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா, மாற்றுவலுவுள்ளோர் சங்க இணைப்பாளர் சாந்தி பா.உறுப்பினரின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில் பசுமைத்தேசம் எனும் இந்த வீட்டுத்தோட்டத்திற்கான விதை தானிய விநியோக திட்டத்தின் மூலம் நாம் எமது மக்களின் சுயமுயற்சிகளை ஊக்குவிக்க எண்ணுகின்றோம்.

வீட்டுக்கு வீடு செய்யப்படுகின்ற சுயமுயற்சி ஒட்டுமொத்தமாக எமது தேசத்தின் அழகுக்கும் பொருளாதார வளத்துக்கும் பலம் சேர்க்கும் ஒன்றாக அமையும்.முன்பிருந்த எமது இந்த மண்ணின் வளங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதை மீளவும் கட்டியெழுப்பும் கனவு எமது மக்களின் மனதில் உள்ளபோதும் அதற்கான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் நிலங்கள் வெறுமையாக இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் இத்தகைய சிறு விவசாயம் தொடர்பான உதவிளை நீங்கள் பெற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எமது நிலத்தை வளர்த்தெடுக்கவேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

இந்த உதவிகள் அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயங்கள் அல்ல உங்கள் வாழ்வில் சிறு ஆதாரமாக நம்பிக்கையை தர வேண்டுமென்பதற்காக தரப்பட்ட உதவி என்பதை நீங்கள் மனதில் விதைத்துக்கொள்ளுங்கள்.

எமது வாழ்வின் நெருக்கடிகளுக்கு ஒரு மாற்றம் வரக்கூடிய ஒளிக்கீற்றுகள் தென்படுகின்றன.அவை பிரகாசித்து நமது ஏக்கங்களுக்கு ஒரு நல்ல தீர்வை கொண்டுவரும்.அதற்கு ஆட்சியாளர்கள் தொடர்பான தெளிவும் மாற்றத்திற்கான சிந்தனையும் உங்கள் மனதில் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.







oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்! தமிழர்களிடம் மஹிந்த உறுதி
» தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி
» நூற்றாண்டு காணும் கிளிநொச்சியின் சொத்து வேரவில் இந்து மகா வித்தியாலயம்: பா.உறுப்பினர் சிறீதரன்
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
» கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum