மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
Page 1 of 1
மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்துக் கூறியது, தமிழ்நாட்டு அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதான ஒரு கருத்து இலங்கை அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
ஒரு பக்கத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக் கூறியதற்காக கல்லெறி வாங்கும் இந்திய மத்திய அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதான ஊகங்களுக்குள்ளேயும் சிக்கியிருக்கிறது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி அண்மை நாட்களாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா, ஒருபோதும், வெளிப்படையாக எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதாக கூறப்போவதில்லை.
இது இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் இந்தியா தலையிடாது என்றும் மிக இலாவகமாக நழுவிக் கொள்ளும். அதற்காக, இந்த தேர்தலில் இந்தியாவுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றோ, எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்க முனையாது என்றோ கருதுவதற்கில்லை.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத்தக்க வேட்பாளர் யார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவரை ஆதரிக்க இந்தியா முனையும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிப்படையாக இல்லாவிட்டாலும், இரகசியமான முறையிலேனும் இந்தியா ஏதோ ஒரு வேட்பாளரை ஆதரிக்கும்.
இத்தகையதொரு பின்னணியில் தான், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், சுமார் ஒரு மாதம் வரையே உள்ள சூழலில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு வந்து, முக்கிய அரசியல் தரப்புகளுடன் பேசியுள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயம்.
அஜித் டோவலின் பயணத்தின் அடிப்படை நோக்கம், காலியில் நடந்த கடல் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பது தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்த நோக்கத்துக்கு அப்பாலும் அவர், இலங்கையில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், பல்வேறு தரப்பினரையும் இந்தியாவின் மிக முக்கியமானதொரு அதிகாரி சந்தித்துப் பேசியதை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோரை மட்டுமன்றி, இலங்கை அரசியலில் முக்கியமான சக்திகளான ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றையும் அஜித் டோவல் சந்தித்திருந்தார்.
ஐ.தே.க. குழுவினருடன் நடத்திய சந்திப்பின் ஒரு பகுதியாக ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியாகவும் 10 நிமிடங்கள் பேசியிருக்கிறார் டோவல்.
அதுபோல, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை தனியாகவும் சந்தித்திருக்கிறார்.
இந்தச் சந்திப்புகள் அனைத்திலும் இரண்டு விடயங்களும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஒன்று பாதுகாப்பு ரீதியான விடயங்கள், அடுத்தது அரசியல் ரீதியான விடயங்கள்.
இலங்கையில் சீனத் தலையீடுகள் பற்றிய இந்தியாவின் கவலைகள், அதுபற்றிய இலங்கைத் தரப்புகளின் நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்வது டோவலின் முதலாவது நோக்கமாக இருந்தது.
அடுத்து, அரசியல் ரீதியான நிலைமைகள், அதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அதன் தாக்கங்கள் எப்படியானதாக இருக்கும் என்பது டோவல் கவனம் செலுத்திய இரண்டாவது விடயமாகும்.
இந்த இரண்டு அடிப்படை விடயங்களும் தான், இந்தியா யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் சீனாவின் தலையீடு இந்தியாவுக்குப் பெருந்தலைவலியாக மாறியிருக்கிறது.
முன்னர் பொருளாதார ரீதியாக இருந்த தலையீடுகள் இப்போது இராணுவத் தலையீடுகளாக மாறத் தொடங்கியுள்ளதை, இந்தியாவின் சமீபத்திய கருத்துகள் உணர்த்துகின்றன.
சீன நீர்மூழ்கிகளின் வருகைக்குப் பின்னர், தான் இந்தியா இதுபற்றி வெளிப்படையாக கொஞ்சம் பேசத் தொடங்கியுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் வெளி விவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் மட்டுமன்றி, காலி கடல் பாதுகாப்பு மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சூசகமாக வெளியிட்ட கருத்துகளும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் இராணுவத் தலையீடுகளை இந்தியா விரும்பவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சி தான் சீனாவின் பொருளாதார வலைக்குள் இலங்கையை கொண்டு சென்று வீழ்த்தியது.
இந்தியா பலமுறை எச்சரித்தும் கூட, சீனாவின் பக்கத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்தை வெளியே கொண்டுவர முடியவில்லை.
சீனாவின் நிழலில் இருப்பதான துணிச்சலில், இந்தியாவுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளைக் கூட அலட்சியம் செய்து வந்திருக்கிறது ராஜபக்ச அரசாங்கம்.
இந்தநிலையில், மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால், இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து விடும் என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.
இந்த அடிப்படைக் காரணத்தை வைத்துத் தான், மைத்திரிபால சிறிசேனவை இந்தியா ஆதரிப்பதான கருத்து, உருவாகியிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவை, அஜித் டோவல் சந்தித்ததை வைத்து இந்த ஊகம் இன்னமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அஜித் டோவல் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தது வழமைக்கு மாறானதொரு விடயமல்ல என்பதே இந்திய ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருதரப்பினரையும் சந்திப்பது வழக்கமானது தான்.
இதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று இந்தியத் தரப்பு கூறுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ச எப்படிப்பட்டவர், அவரது அணுகுமுறைகள் என்ன என்பதை இந்தியா நன்கறியும்.
அதுபோலவே, எதிரணியில் உள்ள சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் அணுகுமுறைகள் எப்படிப்பட்டவை என்பதையும் இந்தியா அறியும்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன எப்படிப்பட்டவர், அவர் எப்படியான அணுகு முறைகளை கைக்கொள்வார், அவரது கொள்கை என்ன என்பதை இந்தியா அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.
எனவே, மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பை நிச்சயம் அஜித் டோவல் வேறுபட்டதொன்றாகத் தான் அணுகியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. -இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்த அவரது கருத்து, நிலைப்பாடு என்ன?
* வெற்றி பெற்றால் இந்தியாவுடனான அவரது உறவுகளின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்?
* 13வது திருத்தச்சட்டம் தொடர்பான நிலைப்பாடு என்ன?
* தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் அவரது நிலை என்ன?
என்று அறிந்து கொள்வதில் அஜித் டோவல் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விடயங்கள் எதிலுமே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் நடந்து கொண்டவர் அல்ல.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து வந்திருக்கும் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, பெரியதொரு மாற்றத்தை இந்தியா எதிர்பார்க்காது போனாலும், குறிப்பிடத்தக்க விடயங்களில், இந்தியாவுக்கு சார்பான நிலை அவரிடம் தென்படுகிறதா என்பதை எதிர்பார்க்கும்.
சீனா விடயத்தில் இனிமேலும் நெருக்கமாவதில்லை என்றும், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவதென்றும் எதிரணித் தரப்பில் இந்தியாவுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆயினும், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, தமிழ் மக்களு க்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது போன்ற விடயங்களில், மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்குத் திருப்தியளிக் கும் விதத்தில் நடந்து கொள்ளத் தயாரி ல்லை என்றே அறியப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன எப்போதும் தமிழர் பிரச்சினை விடயத்தில், ஆக்கபூர்வமாக செயற்பட்ட ஒரு தலைவரல்ல.
சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தி வந்தவர். அதைவிட இப்போது அவர் சிங்களத் தேசியவாத அமைப்புகளின் ஆதரவுப் பிடியிலும் சிக்கியுள்ளார் என்பதால், தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியையும் வழங்கக் கூடிய நிலையிலும் இல்லை.
எவ்வாறாயினும், இந்தியாவைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக்சவை விட வும், மைத்திரிபால சிறிசேன, சற்று சாதகமானவர் என்றே கணிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழர் பிரச்சினை மற்றும் 13வது திருத்தம் என்பன அதற்கு இரண்டாவது பட்சமாகவே இருக்கும். இந்தியாவின் முதல் கரிசனை என்பது அதன் பாதுகாப்புத் தான்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு மைத் திரிபால சிறிசேன சாதகமானதொரு நபராகவே கருதப்படுவார். சீன சார்பில் இருந்து விடுபடவும், இந்திய உறவை மேம்படுத்தத்தக்க ஒருவராகவும் அவர் இருக்கிறார்.
இவை மைத்திரிபாலவுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேவேளை, இந்தியாவுக்கு இன்னொரு சிக்கலும் உள்ளது. வெளிப்படையாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முயன்றால், ஒருவேளை மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்று விட்டால் ஆபத்தாகவும் அமைந்து விடும்.
சரத் பொன்சேகாவை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்ததன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.
அதுபோலவே, மூன்றாவது தடவையும் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு விட்டால், இந்தியாவை தூர விலக்கி விட்டு, அவர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொள்வாரோ என்ற பயமும் இந்தியாவுக்கு இருக்கவே செய்யும்.
எனவே, இந்தியா இப்போது, மதில் மேல் பூனையாகவே விரும்பும். அதுவே இந்தியாவுக்குப் பாதுகாப்பானது.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதான ஒரு கருத்து இலங்கை அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
ஒரு பக்கத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக் கூறியதற்காக கல்லெறி வாங்கும் இந்திய மத்திய அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதான ஊகங்களுக்குள்ளேயும் சிக்கியிருக்கிறது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி அண்மை நாட்களாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா, ஒருபோதும், வெளிப்படையாக எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதாக கூறப்போவதில்லை.
இது இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் இந்தியா தலையிடாது என்றும் மிக இலாவகமாக நழுவிக் கொள்ளும். அதற்காக, இந்த தேர்தலில் இந்தியாவுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றோ, எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்க முனையாது என்றோ கருதுவதற்கில்லை.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத்தக்க வேட்பாளர் யார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவரை ஆதரிக்க இந்தியா முனையும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிப்படையாக இல்லாவிட்டாலும், இரகசியமான முறையிலேனும் இந்தியா ஏதோ ஒரு வேட்பாளரை ஆதரிக்கும்.
இத்தகையதொரு பின்னணியில் தான், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், சுமார் ஒரு மாதம் வரையே உள்ள சூழலில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு வந்து, முக்கிய அரசியல் தரப்புகளுடன் பேசியுள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயம்.
அஜித் டோவலின் பயணத்தின் அடிப்படை நோக்கம், காலியில் நடந்த கடல் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பது தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்த நோக்கத்துக்கு அப்பாலும் அவர், இலங்கையில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், பல்வேறு தரப்பினரையும் இந்தியாவின் மிக முக்கியமானதொரு அதிகாரி சந்தித்துப் பேசியதை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோரை மட்டுமன்றி, இலங்கை அரசியலில் முக்கியமான சக்திகளான ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றையும் அஜித் டோவல் சந்தித்திருந்தார்.
ஐ.தே.க. குழுவினருடன் நடத்திய சந்திப்பின் ஒரு பகுதியாக ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியாகவும் 10 நிமிடங்கள் பேசியிருக்கிறார் டோவல்.
அதுபோல, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை தனியாகவும் சந்தித்திருக்கிறார்.
இந்தச் சந்திப்புகள் அனைத்திலும் இரண்டு விடயங்களும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஒன்று பாதுகாப்பு ரீதியான விடயங்கள், அடுத்தது அரசியல் ரீதியான விடயங்கள்.
இலங்கையில் சீனத் தலையீடுகள் பற்றிய இந்தியாவின் கவலைகள், அதுபற்றிய இலங்கைத் தரப்புகளின் நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்வது டோவலின் முதலாவது நோக்கமாக இருந்தது.
அடுத்து, அரசியல் ரீதியான நிலைமைகள், அதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அதன் தாக்கங்கள் எப்படியானதாக இருக்கும் என்பது டோவல் கவனம் செலுத்திய இரண்டாவது விடயமாகும்.
இந்த இரண்டு அடிப்படை விடயங்களும் தான், இந்தியா யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் சீனாவின் தலையீடு இந்தியாவுக்குப் பெருந்தலைவலியாக மாறியிருக்கிறது.
முன்னர் பொருளாதார ரீதியாக இருந்த தலையீடுகள் இப்போது இராணுவத் தலையீடுகளாக மாறத் தொடங்கியுள்ளதை, இந்தியாவின் சமீபத்திய கருத்துகள் உணர்த்துகின்றன.
சீன நீர்மூழ்கிகளின் வருகைக்குப் பின்னர், தான் இந்தியா இதுபற்றி வெளிப்படையாக கொஞ்சம் பேசத் தொடங்கியுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் வெளி விவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் மட்டுமன்றி, காலி கடல் பாதுகாப்பு மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சூசகமாக வெளியிட்ட கருத்துகளும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் இராணுவத் தலையீடுகளை இந்தியா விரும்பவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சி தான் சீனாவின் பொருளாதார வலைக்குள் இலங்கையை கொண்டு சென்று வீழ்த்தியது.
இந்தியா பலமுறை எச்சரித்தும் கூட, சீனாவின் பக்கத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்தை வெளியே கொண்டுவர முடியவில்லை.
சீனாவின் நிழலில் இருப்பதான துணிச்சலில், இந்தியாவுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளைக் கூட அலட்சியம் செய்து வந்திருக்கிறது ராஜபக்ச அரசாங்கம்.
இந்தநிலையில், மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால், இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து விடும் என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.
இந்த அடிப்படைக் காரணத்தை வைத்துத் தான், மைத்திரிபால சிறிசேனவை இந்தியா ஆதரிப்பதான கருத்து, உருவாகியிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவை, அஜித் டோவல் சந்தித்ததை வைத்து இந்த ஊகம் இன்னமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அஜித் டோவல் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தது வழமைக்கு மாறானதொரு விடயமல்ல என்பதே இந்திய ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருதரப்பினரையும் சந்திப்பது வழக்கமானது தான்.
இதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று இந்தியத் தரப்பு கூறுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ச எப்படிப்பட்டவர், அவரது அணுகுமுறைகள் என்ன என்பதை இந்தியா நன்கறியும்.
அதுபோலவே, எதிரணியில் உள்ள சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் அணுகுமுறைகள் எப்படிப்பட்டவை என்பதையும் இந்தியா அறியும்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன எப்படிப்பட்டவர், அவர் எப்படியான அணுகு முறைகளை கைக்கொள்வார், அவரது கொள்கை என்ன என்பதை இந்தியா அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.
எனவே, மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பை நிச்சயம் அஜித் டோவல் வேறுபட்டதொன்றாகத் தான் அணுகியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. -இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்த அவரது கருத்து, நிலைப்பாடு என்ன?
* வெற்றி பெற்றால் இந்தியாவுடனான அவரது உறவுகளின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்?
* 13வது திருத்தச்சட்டம் தொடர்பான நிலைப்பாடு என்ன?
* தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் அவரது நிலை என்ன?
என்று அறிந்து கொள்வதில் அஜித் டோவல் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விடயங்கள் எதிலுமே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் நடந்து கொண்டவர் அல்ல.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து வந்திருக்கும் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, பெரியதொரு மாற்றத்தை இந்தியா எதிர்பார்க்காது போனாலும், குறிப்பிடத்தக்க விடயங்களில், இந்தியாவுக்கு சார்பான நிலை அவரிடம் தென்படுகிறதா என்பதை எதிர்பார்க்கும்.
சீனா விடயத்தில் இனிமேலும் நெருக்கமாவதில்லை என்றும், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவதென்றும் எதிரணித் தரப்பில் இந்தியாவுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆயினும், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, தமிழ் மக்களு க்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது போன்ற விடயங்களில், மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்குத் திருப்தியளிக் கும் விதத்தில் நடந்து கொள்ளத் தயாரி ல்லை என்றே அறியப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன எப்போதும் தமிழர் பிரச்சினை விடயத்தில், ஆக்கபூர்வமாக செயற்பட்ட ஒரு தலைவரல்ல.
சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தி வந்தவர். அதைவிட இப்போது அவர் சிங்களத் தேசியவாத அமைப்புகளின் ஆதரவுப் பிடியிலும் சிக்கியுள்ளார் என்பதால், தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியையும் வழங்கக் கூடிய நிலையிலும் இல்லை.
எவ்வாறாயினும், இந்தியாவைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக்சவை விட வும், மைத்திரிபால சிறிசேன, சற்று சாதகமானவர் என்றே கணிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழர் பிரச்சினை மற்றும் 13வது திருத்தம் என்பன அதற்கு இரண்டாவது பட்சமாகவே இருக்கும். இந்தியாவின் முதல் கரிசனை என்பது அதன் பாதுகாப்புத் தான்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு மைத் திரிபால சிறிசேன சாதகமானதொரு நபராகவே கருதப்படுவார். சீன சார்பில் இருந்து விடுபடவும், இந்திய உறவை மேம்படுத்தத்தக்க ஒருவராகவும் அவர் இருக்கிறார்.
இவை மைத்திரிபாலவுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேவேளை, இந்தியாவுக்கு இன்னொரு சிக்கலும் உள்ளது. வெளிப்படையாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முயன்றால், ஒருவேளை மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்று விட்டால் ஆபத்தாகவும் அமைந்து விடும்.
சரத் பொன்சேகாவை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்ததன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.
அதுபோலவே, மூன்றாவது தடவையும் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு விட்டால், இந்தியாவை தூர விலக்கி விட்டு, அவர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொள்வாரோ என்ற பயமும் இந்தியாவுக்கு இருக்கவே செய்யும்.
எனவே, இந்தியா இப்போது, மதில் மேல் பூனையாகவே விரும்பும். அதுவே இந்தியாவுக்குப் பாதுகாப்பானது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி
» மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
» மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி
» மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்!- சரத் என் சில்வா
» ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
» மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
» மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி
» மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்!- சரத் என் சில்வா
» ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya