Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்

Go down

சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் Empty சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்

Post by oviya Sun Dec 07, 2014 3:15 pm

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேரோட் டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, 4 மாசி வீதிகளிலும் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணியளவில் சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கீழமாசி வீதி தேர் நிறுத்தும் இடத்திற்கு புறப்பாடாகினர். சுந்தரேஸ்வரர், பிரியாவிடை பெரிய தேரில் 6.05 மணிக்கு எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சம்போ ஹர, ஹர மகாதேவா என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேர இடைவெளியில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சின்னத்தேர் புறப்பாடானது. 

தேர் நான்கு மாசி வீதிகளை சுற்றி மேள, தாளம் முழங்க வலம் வந்தது. வீடுகள், மாடிகள், வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். தேர் மதியம் 1.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏழு ஜென்ம பாவம் விலகும்: சித்திரைத் திருவிழாவில் அனைத்து நாட்களிலும் அம்மன் ஒரு வாகனத்திலும், சுவாமி மற்றும் பிரியாவிடை ஒரு வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருவர். நேற்று இரவு 7 மணிக்கு மட்டும் தான் ஒரே சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதைக் காண்பவர்களுக்கு 7 ஜென்ம பாவம் போகும் என்பது ஐதீகம். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாசி வீதிகளில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் நிலைக்கால் நாட்டுவிழா
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum