அம்பாறையில் அடை மழை: மக்கள் இடம்பெயர்வு
Page 1 of 1
அம்பாறையில் அடை மழை: மக்கள் இடம்பெயர்வு
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று 12ஆம் பிரிவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள், அக்கரைப்பற்று கலாநிதி பதியுதீன் மஹூமூத் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து இடி, மின்னலுடன் அடை மழை பெய்வதால், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், மழை காரணமாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டோரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களே மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், கடற்றொழிலாளர்களையும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகள் பிரதேச சபைகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முகத்துவாரங்களும் வெட்டப்பட்டு வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள், அக்கரைப்பற்று கலாநிதி பதியுதீன் மஹூமூத் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து இடி, மின்னலுடன் அடை மழை பெய்வதால், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், மழை காரணமாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டோரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களே மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், கடற்றொழிலாளர்களையும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகள் பிரதேச சபைகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முகத்துவாரங்களும் வெட்டப்பட்டு வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
» நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» மக்கள் மனங்களை ஆளும் புதுவை மணக்குள விநாயகர்
» பொகவந்தலாவையில் மக்கள் ஆர்ப்பாட்டம்: பிரதான வீதியில் பரபரப்பு
» நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» மக்கள் மனங்களை ஆளும் புதுவை மணக்குள விநாயகர்
» பொகவந்தலாவையில் மக்கள் ஆர்ப்பாட்டம்: பிரதான வீதியில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya