Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

Go down

கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன் Empty கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

Post by oviya Tue Dec 09, 2014 1:20 pm

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக பேசி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கென தனித்துவமான யாப்பு நடைமுறை இன்மையினால் சமகாலத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் உள்ளக சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியாமலிருக்கின்றது.

இந்நிலை நீடிக்க முடியாது. என்பதுடன் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக பேசிவரும் எமக்கு இவ்வாறான நிலை சாதகமானதாகவும் அமையப் போவதில்லை.

எனவே கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றய 3 கட்சிகள் இணைந்து ஒரு பொதுவான யாப்பினை தமிழரசு கட்சிக்கு சமர்ப்பித்திருக்கின்றோம்.

மேற்படி யாப்பு நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் கட்சிக்குள் ஒரு ஒழுங்கு ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன் ஆக்கபூர்வமான எதிர்கால நடவடிக்கைக்கும் அது வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 20வது அமர்வில் மாகாசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோல் தூக்கிவீசிய சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாகாண சபையின் கடந்த அமர்வில் இடம்பெற்ற சம்பவத்தில், உண்மையில் சிவாஜிலிங்கத்தின் பக்கம் நியாயம் இருக்கின்றது. அதனை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அவருடைய நோக்கமும், எங்களுடைய நோக்கமும் ஒன்று என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இருவரும் ஒரு நோக்கத்தை கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் மற்றவருடைய செயற்பாட்டை தடுக்க முடியாது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யலாம்.

அதுவும் எமக்காக அல்ல. அது தமிழ் மக்களுக்கான விட்டுக்கொடுப்பு. அதனை செய்யுமாறே கட்சி கேட்டிருந்தது. அதற்காக அவர் கோபமடைந்து செங்கோலை தூக்கி வீசியமை ஒத்துக் கொள்ள முடியாத விடயமாகும்.

அவ்வாறு அவர் நடந்துகொள்ள கூடாது. எனவே இந்த விடயத்தில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதானால் அதனை நாம் செய்ய முடியாது. அதனை நாம் தேர்தலில் போட்டியிட்ட சின்னத்திற்குரிய தமிழரசு கட்சியே செய்ய வேண்டும். இதனாலும் பல சிக்கல்கள் எழுகின்றன. அதற்கு காரணம் கட்சிக்கு ஒரு பொதுவான யாப்பு இல்லாமையே.

ஒரு பொதுவான யாப்பு இருக்குமானால் இவ்வாறான விடயங்களில் கட்சிசார்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளினை எடுக்க முடியும். ஆனால் அவ்வாறான ஒன்று இல்லாமையினால் தமிழரசுக் கட்சி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாங்கள் 3 கட்சிகள் இணைந்து,ஒரு யாப்பினை தமிழரசு கட்சியிடம் சமர்ப்பித்திருக்கின்றோம்.

அது தொடர்பில் நாம் அடுத்துவரும் சில தினங்களில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம். என ஒட்டுமொத்தமாக பிரதேச சபைகள், மாநகரசபைகள் என பல சிக்கல்கள் தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருக்கின்றன. எனவே இவற்றுக்கு தீர்வு பொது யாப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே கிடைக்கும் என்றார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
» இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -
» எந்த நாட்டிடமும் காசு வாங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இல்லை: அரியம் எம்.பி
» தோஷம் உள்ளவர்களுக்கு ராகு ப்ரீதி அவசியம்
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum