Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா

Go down

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா Empty திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா

Post by oviya Tue Dec 09, 2014 1:28 pm

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்தை சேர்ந்தார். அங்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்ததும் சுவாமி அம்பாள் 11 முறை வசந்தமண்டபத்தை சுற்றி வந்து தங்கத்தேரில் எழுந்தருளி கோயிலை அடைந்தார்.

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி நேற்று
அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. நாளை (24ஆம் தேதி) விசாகத் திருவிழாவன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது.அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவர், சண்முகருக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைஅம்மாளுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்தை சேர்கிறார். அங்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

இரவில் சுவாமி வசந்தமண்டபம் சென்று முனி குமாரருக்கு சாப விமோசனமளித்து கோயிலை சேருகிறார். விழாவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். டிஎஸ்பி ஞானசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பிரதாபன், தில்லைநாகராஜன் மற்றும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணை யர் (பொ) அன்புமணி, அலுவலக கண்காணிப்பா ளர் சாத்தையா, ராமசாமி, சுப்பையன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிர மணியன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
» புத்தூர் குழுமாயி கோயிலில் இன்று குட்டிகுடி திருவிழா
» ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று மாலை முடிகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum