இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா கடந்த 15ஆம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேர்ந்தார்.
அங்கு அபிஷே கம், அலங்காரம், தீபாரா தனை நடந்ததும் சுவாமி& அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கத் தேரில் எழுந்தருளி கோயிலை அடைந்தார். விசாகத் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை சகிதம் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேர்கிறார்.
அங்கு அபிஷே கம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. இரவில் சுவாமி வசந்த மண்டபம் சென்று காட்சியருளி முனிகுமாரருக்கு சாப விமோசனமளித்து கோயிலை சேர்கிறார். வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூர் வந்து குவிந்துள்ளனர்.
டிஎஸ்பி ஞானசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பிரதா பன், தில்லை நாகராஜன் மற்றும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணை யர் (பொறுப்பு) அன்புமணி, அலுவலக கண்காணிப் பாளர் சாத்தையா, ராம சாமி, சுப்பையன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
அங்கு அபிஷே கம், அலங்காரம், தீபாரா தனை நடந்ததும் சுவாமி& அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கத் தேரில் எழுந்தருளி கோயிலை அடைந்தார். விசாகத் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை சகிதம் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேர்கிறார்.
அங்கு அபிஷே கம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. இரவில் சுவாமி வசந்த மண்டபம் சென்று காட்சியருளி முனிகுமாரருக்கு சாப விமோசனமளித்து கோயிலை சேர்கிறார். வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூர் வந்து குவிந்துள்ளனர்.
டிஎஸ்பி ஞானசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பிரதா பன், தில்லை நாகராஜன் மற்றும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணை யர் (பொறுப்பு) அன்புமணி, அலுவலக கண்காணிப் பாளர் சாத்தையா, ராம சாமி, சுப்பையன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya