Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மங்களம் அருளும் மரகதாம்பிகை

Go down

மங்களம் அருளும் மரகதாம்பிகை Empty மங்களம் அருளும் மரகதாம்பிகை

Post by oviya Tue Dec 09, 2014 1:47 pm

குறுநில மன்னர்களான சம்புவராயர் ஆட்சிக் காலத்தில் ‘ராஜகம்பீர நல்லூர்’ என்று போற்றப்பட்ட இவ்வூர் படைவீட்டை(படவேடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நாயக்கர்களின் முக்கிய ஊராகும். கி.பி.1317ம் ஆண்டு எழுப்பப்பட்ட இவ்வூர் சிவாலயம் அப்போதைய ஆட்சி மன்னனான வீர ஜம்பன் என்கிற மன்னனின் பெயரில், ‘வீரஜம்பீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டது! இப்பதி இறைவன் ‘வீரஜாம்பீஸ்வரர்’ என்று போற்றப்படலானார். கி ருஷ்ண தேவராயர், பராக்கிரம பாண்டியன் ஆகியோரது நிலக் கொடைகளையும் திருப்பணிகளையும் பெற்றுள்ளது இவ்வாலயம். வீரஜம்பன் மற்றும் கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டுகள் இச்செய்தியினை நமக்கு பறைசாற்றுகின்றன!

கிருஷ்ணதேவராயரின் சின்னமான காளையுடன் கூடிய பிறைச் சின்னம். ஆலயத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் கொண்ட வீரஜம்பீஸ்வரர் ஆலயம். காலத்தால் சீர்குலைக்கப்பட்டு இன்று பாழ் நிலையில் உள்ளது. ஊரின் நடுவே தார்சாலைக்கு இடப்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம். மதில் சுவர்கள் சரிந்து உள்ளிருக்கும் சந்நதிகள் தனித் தனி கோயிலாக காட்சியளிக்கின்றன. ஆலயத்துள் நுழைந்ததும் எழிலே உருவான நந்தியம் பெருமான் வீற்றிருக்கின்றார். மகா மண்டபம் மூடுதளத் தோடு உள்ளது. தன் சந்நதி முற்றிலும் சிதைவுற்ற காரணத்தால், கணபதி இங்கே குடி கொண்டுள்ளார். அதோடு கால பைரவர், சூரியன் மற்றும் சந் திரனும் வீற்றுள்ளனர். அடுத்து அர்த்த மண்டபம். பின் கருவறை. கருவறையுள் கருணாதயாளனாய் அருளாட்சி புரிகின்றார், வீரஜம்பீஸ்வரர்.

ஐயனைப் பணிந்து ஆலய வலம் வருகையில், முறையே கோஷ்டங்களில் உரிய தெய்வங்கள் அருளாசி நல்குகின்றன. மூலவரின் சந்நதி விமானம் மிகவும் பின்னமுற்று, செடிகள் பல முளைத்து, திருப்பணி வேண்டி காத்திருக்கின்றது. அடுத்து மேற்கில் சண்முகரின் தனிச் சந்நதி. அதியற்புத அழ கில் மிளிறும் இந்த சண்முகர், இடது காலை மடித்தும் வலது காலை நாகத்தின் தலைமீதும் பதித்துள்ளார். பால் அபிஷேகத்தின்போது ஆறுமுகர் திருமேனியில் இருந்து வழிந்து வரும் பால், பாம்பின் வாய் வழியே வந்து, பாம்பு பாலை கக்குவதுபோலத் தோன்றுகிறது. வள்ளியும் தெய்வானையும் உடனுள்ளனர்.

அடுத்தபடியாக சுவாமியின் வாம பாகத்தில் தல நாயகியான மரகதாம்பிகை, மரகத ஜொலிப்பில் அருளாட்சி புரிகின்றாள். வீரஜம்பீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகள் நெய்தீபம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து வர நினைத்தவை யாவும் நிறைவேறும். ஆறுமுகப் பெருமானுக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை சஷ்டியில் பால் அபிஷேகம் செய்து, செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்து, ஏழாவது சஷ்டி யன்று சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்ய, அனைத்து தோஷங்களும் நீங்குவதோடு எதிரி பயமும் விலகும். மரகதவல்லி அம்பாளுக்கு ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து, எலுமிச்சம்பழ மாலை சாற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்குவதோடு மாங்கல்ய பலமும் கூடும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். இத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகே உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum