மங்களம் அருளும் மரகதாம்பிகை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மங்களம் அருளும் மரகதாம்பிகை
குறுநில மன்னர்களான சம்புவராயர் ஆட்சிக் காலத்தில் ‘ராஜகம்பீர நல்லூர்’ என்று போற்றப்பட்ட இவ்வூர் படைவீட்டை(படவேடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நாயக்கர்களின் முக்கிய ஊராகும். கி.பி.1317ம் ஆண்டு எழுப்பப்பட்ட இவ்வூர் சிவாலயம் அப்போதைய ஆட்சி மன்னனான வீர ஜம்பன் என்கிற மன்னனின் பெயரில், ‘வீரஜம்பீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டது! இப்பதி இறைவன் ‘வீரஜாம்பீஸ்வரர்’ என்று போற்றப்படலானார். கி ருஷ்ண தேவராயர், பராக்கிரம பாண்டியன் ஆகியோரது நிலக் கொடைகளையும் திருப்பணிகளையும் பெற்றுள்ளது இவ்வாலயம். வீரஜம்பன் மற்றும் கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டுகள் இச்செய்தியினை நமக்கு பறைசாற்றுகின்றன!
கிருஷ்ணதேவராயரின் சின்னமான காளையுடன் கூடிய பிறைச் சின்னம். ஆலயத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் கொண்ட வீரஜம்பீஸ்வரர் ஆலயம். காலத்தால் சீர்குலைக்கப்பட்டு இன்று பாழ் நிலையில் உள்ளது. ஊரின் நடுவே தார்சாலைக்கு இடப்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம். மதில் சுவர்கள் சரிந்து உள்ளிருக்கும் சந்நதிகள் தனித் தனி கோயிலாக காட்சியளிக்கின்றன. ஆலயத்துள் நுழைந்ததும் எழிலே உருவான நந்தியம் பெருமான் வீற்றிருக்கின்றார். மகா மண்டபம் மூடுதளத் தோடு உள்ளது. தன் சந்நதி முற்றிலும் சிதைவுற்ற காரணத்தால், கணபதி இங்கே குடி கொண்டுள்ளார். அதோடு கால பைரவர், சூரியன் மற்றும் சந் திரனும் வீற்றுள்ளனர். அடுத்து அர்த்த மண்டபம். பின் கருவறை. கருவறையுள் கருணாதயாளனாய் அருளாட்சி புரிகின்றார், வீரஜம்பீஸ்வரர்.
ஐயனைப் பணிந்து ஆலய வலம் வருகையில், முறையே கோஷ்டங்களில் உரிய தெய்வங்கள் அருளாசி நல்குகின்றன. மூலவரின் சந்நதி விமானம் மிகவும் பின்னமுற்று, செடிகள் பல முளைத்து, திருப்பணி வேண்டி காத்திருக்கின்றது. அடுத்து மேற்கில் சண்முகரின் தனிச் சந்நதி. அதியற்புத அழ கில் மிளிறும் இந்த சண்முகர், இடது காலை மடித்தும் வலது காலை நாகத்தின் தலைமீதும் பதித்துள்ளார். பால் அபிஷேகத்தின்போது ஆறுமுகர் திருமேனியில் இருந்து வழிந்து வரும் பால், பாம்பின் வாய் வழியே வந்து, பாம்பு பாலை கக்குவதுபோலத் தோன்றுகிறது. வள்ளியும் தெய்வானையும் உடனுள்ளனர்.
அடுத்தபடியாக சுவாமியின் வாம பாகத்தில் தல நாயகியான மரகதாம்பிகை, மரகத ஜொலிப்பில் அருளாட்சி புரிகின்றாள். வீரஜம்பீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகள் நெய்தீபம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து வர நினைத்தவை யாவும் நிறைவேறும். ஆறுமுகப் பெருமானுக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை சஷ்டியில் பால் அபிஷேகம் செய்து, செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்து, ஏழாவது சஷ்டி யன்று சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்ய, அனைத்து தோஷங்களும் நீங்குவதோடு எதிரி பயமும் விலகும். மரகதவல்லி அம்பாளுக்கு ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து, எலுமிச்சம்பழ மாலை சாற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்குவதோடு மாங்கல்ய பலமும் கூடும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். இத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகே உள்ளது.
கிருஷ்ணதேவராயரின் சின்னமான காளையுடன் கூடிய பிறைச் சின்னம். ஆலயத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் கொண்ட வீரஜம்பீஸ்வரர் ஆலயம். காலத்தால் சீர்குலைக்கப்பட்டு இன்று பாழ் நிலையில் உள்ளது. ஊரின் நடுவே தார்சாலைக்கு இடப்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம். மதில் சுவர்கள் சரிந்து உள்ளிருக்கும் சந்நதிகள் தனித் தனி கோயிலாக காட்சியளிக்கின்றன. ஆலயத்துள் நுழைந்ததும் எழிலே உருவான நந்தியம் பெருமான் வீற்றிருக்கின்றார். மகா மண்டபம் மூடுதளத் தோடு உள்ளது. தன் சந்நதி முற்றிலும் சிதைவுற்ற காரணத்தால், கணபதி இங்கே குடி கொண்டுள்ளார். அதோடு கால பைரவர், சூரியன் மற்றும் சந் திரனும் வீற்றுள்ளனர். அடுத்து அர்த்த மண்டபம். பின் கருவறை. கருவறையுள் கருணாதயாளனாய் அருளாட்சி புரிகின்றார், வீரஜம்பீஸ்வரர்.
ஐயனைப் பணிந்து ஆலய வலம் வருகையில், முறையே கோஷ்டங்களில் உரிய தெய்வங்கள் அருளாசி நல்குகின்றன. மூலவரின் சந்நதி விமானம் மிகவும் பின்னமுற்று, செடிகள் பல முளைத்து, திருப்பணி வேண்டி காத்திருக்கின்றது. அடுத்து மேற்கில் சண்முகரின் தனிச் சந்நதி. அதியற்புத அழ கில் மிளிறும் இந்த சண்முகர், இடது காலை மடித்தும் வலது காலை நாகத்தின் தலைமீதும் பதித்துள்ளார். பால் அபிஷேகத்தின்போது ஆறுமுகர் திருமேனியில் இருந்து வழிந்து வரும் பால், பாம்பின் வாய் வழியே வந்து, பாம்பு பாலை கக்குவதுபோலத் தோன்றுகிறது. வள்ளியும் தெய்வானையும் உடனுள்ளனர்.
அடுத்தபடியாக சுவாமியின் வாம பாகத்தில் தல நாயகியான மரகதாம்பிகை, மரகத ஜொலிப்பில் அருளாட்சி புரிகின்றாள். வீரஜம்பீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகள் நெய்தீபம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து வர நினைத்தவை யாவும் நிறைவேறும். ஆறுமுகப் பெருமானுக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை சஷ்டியில் பால் அபிஷேகம் செய்து, செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்து, ஏழாவது சஷ்டி யன்று சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்ய, அனைத்து தோஷங்களும் நீங்குவதோடு எதிரி பயமும் விலகும். மரகதவல்லி அம்பாளுக்கு ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து, எலுமிச்சம்பழ மாலை சாற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்குவதோடு மாங்கல்ய பலமும் கூடும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். இத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகே உள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மங்களம் தரும் மகாலட்சுமி 108 போற்றி
» மங்களம் தரும் மங்கள சண்டிகா பூஜை
» கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்
» வளங்கள் பல அருளும் பைரவர்
» குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
» மங்களம் தரும் மங்கள சண்டிகா பூஜை
» கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்
» வளங்கள் பல அருளும் பைரவர்
» குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya