Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தேடி வந்து கோயில் கொண்ட காளி

Go down

தேடி வந்து கோயில் கொண்ட காளி Empty தேடி வந்து கோயில் கொண்ட காளி

Post by oviya Tue Dec 09, 2014 1:48 pm

ஆலத்தூர்

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர் ஆலத்தூர். இத்தலத்தின் எல்லையில் வடக்கு திசை நோக்கி கிராம தேவதையாகவும் காவல் தெய்வமாகவும் மகாகாளி அருள்பாலித்து வருகிறாள். சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் பூசாரி வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களின் குலதெய் வமான அடைக்கலம் காத்த ஐயனார் சுவாமிக்கு பட்டு வேஷ்டி வாங்குவதற்காக புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அக்காலத்தில் பஸ் வசதிகள் இல் லாததால் நடை பயணமாகவே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தன்னை ஒரு பெண் பின் தொடர்வதைக் கண்டார்.

அந்தப் பெண் அவரிடம், ‘‘தான் ஒரு அனாதை என்றும் பக்கத்து ஊருக்குச் செல்வதாகவும் உங்கள் துணையுடன் வருகிறேன்’’ என்று ஏமாற்றிக்கொண்டே பின்தொடர்ந்துள்ளாள். அந்தப் பெரியவர் தன் ஊர் எல்லை வந்ததும் அப்பெண்ணிடம், ‘‘என் ஊர் வந்துவிட்டது. இனிமேல் உன்னை நான் அழைத்துச் செல்ல முடியாது. நீ வேறு எங்கேயா வது போய்விடு’’ என்று கூறியுள்ளார். ஆனால், அப்பெண்ணோ அவர் கூடவே வருவேன் என கூறியுள்ளாள். அவரோ மறுத்திருக்கிறார். இருவருக்கும் விவாதம் ஏற்பட்டதாம். உடனே அப் பெண் அவரின் இரண்டு கண்களையும் குருடாக்கி விட்டு மாயமாய் மறைந்து விட்டாளாம். அவர் அவ்விடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.

அவ்வழி யாக வந்தவரிடம் தனக்கு நடந்தவற்றை சொல்லி தன்னை ஓர் மந்திரக்காரி கண்களை கட்டிவிட்டு மறைந்து விட்டாள் என கூறியுள்ளார். அப்பெரியவ ரின் வீட்டிற்கு விஷயம் தெரியப்படுத்தப்பட்டது. உடனே ஐயனார் கோயில் பூசாரி அவ்விடத்திற்குச் சென்று அவருக்கு விபூதி இட்டு பிரம்பால் தலை யில் அடித்தவுடன் பார்வை வந்தது. அவர்மேல் அருள் வந்து தான் வந்தது காளி என்றும், தான் இவ்விடத்தில் அமையப் போவதாகவும் கூறியிருக்கி றாள். அவள் காட்டிய இடத்தில் ஒரு சூலம் நடப்பட்டு பல ஆண்டுகளாக வழிபட்டு வந்துள்ளனர். பிறகு காலங்கள் மாற ஊரும் வளர்ச்சியடைந்தது. அப்போது அவ்விடத்தில் கோயில் கட்டப்பட்டு காளியின் சிலையும் பிரதிஷ்டை செய்தனர்.

இந்த ஆலயத்தில் அம்பாள், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான அடைக்கலம் காத்த ஐயனார், ஆஞ்சநேயர், முனீஸ்வரர் ஆகியோர் அருள்பா லித்து வருகின்றனர். எல்லா ஆலயங்களிலும் விநாயகர் கிழக்கு திசை நோக்கியே அமர்ந்திருப்பார். இங்குள்ள வலம்புரி விநாயகர் வடக்கு திசை நோக்கி அமைந்து இருப்பது சிறப்பாகும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைப்போல அபூர்வமான வலம்புரி விநாயகர் இவர். இக்கோயிலில் நாக லிங்க மரம் தலவிருட்சமாக உள்ளது. செவ்வாய் தோறும் இங்குள்ள விநாயகருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகின் றன.

திருமணம், பிள்ளைப் பேறு, பேய், பிசாசு, பில்லி, சூன்யம் அகலுதல், களவு போன பொருள்கள் மீண்டும் கிடைப்பது போன்றவை அம்மனை நேர்ந்து கொள்ள வரமாய் கிடைக்கின்றன. இன்னல்கள் தீர்க்கும் மகாகாளியை ஒருமுறை வந்து தரிசிப்போர் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவர் என்பது உறுதி. பட்டுக்கோட்டையில் இருந்து வடசேரி வழியாக மன்னார்குடி செல்லும் பாதையில் 8 கி.மீ. தொலைவில் ஆலத்தூர் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum