Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தேர்தல் வன்முறைகள் தொடர்பான பொறுப்பினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும்!- பொலிஸ் மா அதிபர்

Go down

தேர்தல் வன்முறைகள் தொடர்பான பொறுப்பினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும்!- பொலிஸ் மா அதிபர் Empty தேர்தல் வன்முறைகள் தொடர்பான பொறுப்பினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும்!- பொலிஸ் மா அதிபர்

Post by oviya Wed Dec 10, 2014 12:58 pm

பாரிய அளவிலான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான பொறுப்பினை பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கொன் அறிவித்துள்ளார்.
எழுத்து மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான முழுப் பொறுப்பினையும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது துப்பாக்கிகளை சட்டவிரோதமான முறையில் ஏந்திச் செல்பவர்களை தராதரம் பாராது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோதல் பிரச்சார கடமைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக வாகனங்களில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது குறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஆறு மனித படுகொலைகள் பதிவாகியிருந்தன.

இந்த ஜனாதிபதி தேர்தலில் மனித உயிர்ச் சேதங்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதிச் சோதனைச் சாவடிகள் திடீர் சோதனைகள் ரோந்துப் பணிகள் என பல்வேறு வழிகளில் தேர்தல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!
» மட்டக்களப்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (மட்டு செய்திகள்)
» பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு
» சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு
» வவுனியாவில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum