மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிறுவப்பட்டுள்ள புதிய தங்கக் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி கம்பத்தடி மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரம் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பழைய கொடிமரத்தினை அகற்றி விட்டு புதியதாக நிறுவ திட்டமிடப்பட்டது. கொடிமரத்திற்கான தேக்கு மரம் நெல்லை செங்கோட்டை புளியரை கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. கோயில் இருப்பில் உள்ள 11 கிலோ தங்கம் மூலம் கொடிமரத்திற்கு கவசம் தயாரிக்கப்பட்டது.
ஜூன் 12ல் ஆகம விதிப்படி பூஜைகள் துவங்கி, நவரத்தின கற்கள் கொடிமரத்தின் அடியில் பதிக்கப்பட்டு, 6 அடிக்கு கீழே ஊன்றப்பட்டது. மேலே 56 அடி தெரியும் வகையில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாமிரக்கவசம் மற்றும் தங்கக்கவசம் பொருத்தப்பட்டது. புதிய கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, 6 மணிக்கு புதிய தங்க கொடிமரத்திற்கு நன்னீராட்டு, உடன் மகாகும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜை நேரங்களில் வேத சிவாகம, திருமுறைப் பாராயணங்கள் பாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில், கொடிமரத்தை வணங்கினால் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம் என்பார்கள். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கொடிமரத்துக்கு திருக்குட நன்னிராட்டு பெருவிழா ஓர் அரிய நிகழ்ச்சியாகும். இவ்விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள்,‘ என தெரிவித்துள்ளார். விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மேயர் ராஜன்செல்லப்பா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கண்ணன், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஜூன் 12ல் ஆகம விதிப்படி பூஜைகள் துவங்கி, நவரத்தின கற்கள் கொடிமரத்தின் அடியில் பதிக்கப்பட்டு, 6 அடிக்கு கீழே ஊன்றப்பட்டது. மேலே 56 அடி தெரியும் வகையில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாமிரக்கவசம் மற்றும் தங்கக்கவசம் பொருத்தப்பட்டது. புதிய கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, 6 மணிக்கு புதிய தங்க கொடிமரத்திற்கு நன்னீராட்டு, உடன் மகாகும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜை நேரங்களில் வேத சிவாகம, திருமுறைப் பாராயணங்கள் பாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில், கொடிமரத்தை வணங்கினால் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம் என்பார்கள். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கொடிமரத்துக்கு திருக்குட நன்னிராட்டு பெருவிழா ஓர் அரிய நிகழ்ச்சியாகும். இவ்விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள்,‘ என தெரிவித்துள்ளார். விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மேயர் ராஜன்செல்லப்பா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கண்ணன், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya