Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அக்னி பூஜித்த அரன்

Go down

அக்னி பூஜித்த அரன் Empty அக்னி பூஜித்த அரன்

Post by oviya Wed Dec 10, 2014 1:18 pm

வன்னிக்குடி

சிவனடியாரான சிபிச்சக்கரவர்த்தியின் மன உறுதியை சோதிக்க வேண்டி அக்னி தேவன் புறா வடிவம் பெற்றும் இந்திரன் பருந்து வடிவம் எடுத்தும் சிபிச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி சோதித்த பாவவினை புறா வடிவெடுத்து வந்த அக்னி தேவனைப் பற்றியது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக மேற்கொண்ட வேள்வியில் அனலாசுரனாக அக்னி தேவன் பங்கேற்றதாலும் பாவவினை அவனைப் பற்றியது. வாயு பகவானுடன் அக்னி ஆணவத்துடன் மேற்கொண்ட தர்க்கத்தினால் வாயு பகவனால் அக்னி அணையப் பெறுவதற்கான சாபம் பெற்றான்.

சிவபெருமானை புறக்கணித்து தட்சன் செய்த தட்ச யாகத்தில் அக்னி தேவன் பங்கேற்ற பாவ வினையும் அவனைச் சூழ்ந்தது. இப்படி பல வகையிலும் பாவ வினைகளால் பிடிக்கப்பெற்ற அக்னி தேவன் அவற்றிலிருந்து விமோசனம் பெற பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாட்டை மேற்கொண்டான். அக்னி இப்படி சிவபெருமானை பூஜித்த திருத்தலங்கள் அக்னீஸ்வரம் என அழைக்கப்படுகின்றன. அக்னீஸ்வரம் என அழைக்கப்படும் தலங்கள் மொத்தம் ஏழு. திருப்புகலூர், கஞ்சனூர், வன்னியூர், கொள்ளிக்காடு, கோட்டூர், காட்டுப்பள்ளி என்ற ஆறுதலங்களுடன் ஏழாவது தலமாக ‘வன்னிக்குடி முழையூர்’ அமைந்துள்ளது.

இத்தலத்தின் தென்கிழக்கு மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, இங்கேயே குடில் அமை த்து அக்னி தேவன் தங்கியிருந்து, தீர்த்தத்தில் நீராடி, இத்தலத்து இறைவனையும் இறைவியையும் பூஜித்து பாவம் நீங்கி அருள் பெற்றதாக தல வர லாறு சொல்கின்றது. ‘வன்னிக்குடி முறையூர்’ என்ற இத்தலத்தில் அமைந்துள்ளதுதான் கைலாசநாதர் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் இறைவியின் சந்நதி வலதுபுறம் உள்ளது. சௌந்தரநாயகி தென்திசை நோக்கி, நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன், புன்னகை தவழ அருள் பாலிக்கும் அழகே அழகு. எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் கைலாசநாதர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

சதுர வடிவிலான ஆவுடையாருடன் இறைவனின் திருமேனி அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும். அக்னியின் மூவகை வடிவங்களில் ஒன்றான நாற்கோண வடிவிலான ஆகவநீய அமைப்பினை இது ஒட்டியிருப்ப தாக பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆலயத்தில் இறைவனின் தென்புற தேவ கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மேற்குப் பிராகாரத்தில் நான்கு திருக்கரங்களுடன் வஜ்ரவேல் தாங்கி வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் முருகன் காட்சி தருகிறார். அக்னிதேவன் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் தோன்றியவன். அதனாலேயே, இன்றும் அந்நாளில் தீப வடிவில் நாம் அக்னி பக வானை வழிபட்டு வருகின்றோம்.

அக்னி பகவானுக்குரிய கார்த்திகை நட்சத்திரமே முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம். எனவே, மாத கார்த்திகை நாட்களில் விரதமிருந்து இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் புத்திரபாக்யம் கிட்டும். தலவிருட்சம் பன்னீர் மரம். இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்தது. ஆலயம் சற்றே சிதலமடைந்த நிலையிலும் உள்ளது. தற்போது, ஆலயத்தைப் புதுப்பிக்கும் திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum