இழந்த பதவியை மீட்டுத் தரும் வியாசர் பூஜித்த ஈசன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இழந்த பதவியை மீட்டுத் தரும் வியாசர் பூஜித்த ஈசன்
பானுபுரம் - வியாசர்பாடியின் புராதனப் பெயர். ஆதவன் அரனின் அருள் பெற்ற தலமிது. ‘ஓம் பானவே நமஹ’ என்று ஆதவனை ஆராதிக்கும் மந்தி ரம் ஒன்றும் உண்டு. சரி! இந்தத் தலத்திற்கும் ஆதவனுக்கும் என்ன தொடர்பு? ஆதவனின் வெப்பத்தை தாங்க முடியாத அவனது மனைவி சமிக்ஞா, தன் நிழலைப் பெண்ணாக்கி விட்டு, குதிரையாய் மாறி கானகத்தில் தவமிருக்க சென்றாள். நிழல் பெண்ணோடு குடித்தனம் நடத்திய சூரியனுக்கு தாமதமாய் தெரிய வருகிறது, தன்னோடு வாழ்வது சமிக்ஞா அல்ல சாயா என்கிற மாயப் பெண் என்று.
தன் மனைவியைத் தேடி புறப்பட்ட சூரியன், வழியில் பிரம்மனைக் காண்கிறான். கடுமையான சினத்தோடு அலையும் ஆதவன், படைப்புத் தலைவ னுக்கு தர வேண்டிய மரியாதையை தர மறந்தான். ஆதவனின் அலட்சியம் பிரம்மனின் கோபத்தைத் தூண்ட, ‘‘மனிதனாய் பூமியில் அலைந்து, சித்தம் தெளிந்தபின் தேவருலகம் வா’’ என சாபமிடுகிறார். சாபம் நீங்கி, மீண்டும் தேவராவது எப்படி எனக் கலங்கி நின்ற சூரியனுக்கு நாரதர் நல்வழியும் காட்டினார்: ‘‘பூலோகம் சென்று ஒரு வன்னி மரத்தடி யில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வா.
நீ இழந்த தேவ அந்தஸ்து திரும்ப கிடைக்கும்.’’ நாரதர் சொல்லை செயலாக்கிய சூரியன், சிவ தரி சனம் பெற்று சாப விமோசனம் பெற்றான். சூரியன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அந்த ஈசன் ரவீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்கிறார். இந்தத் தலமும் பானுபுரமானது. பானுபுரம் வியாசர்பாடியானது எப்படி? மீனவப் பெண்ணின் மகனாய் வந்து, வேதங்களை வகுத்தளித்தவர், வியாச பகவான். இவரது தந்தை பராசர முனிவர். வியாசரின் இயற்பெயர் கிருஷ் ணதுவைபாயனர். கலியுகத்தில் மனிதனுடைய அறிவாற்றல் குறைந்து, வேதத்தின்படியான வாழ்க்கை மறையத் தொடங்கும். உலகம் அதர்மத்தால் அவதிப்படும். எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்பதையே மனிதன் மறந்து, அறியாமையில் மூழ்கி கிடக்கும்படியாகிவிடும்.
இதை எல்லாம் மீறி மக்களுக்கு ஆன்ம விடுதலையில் வேட்கை ஏற்படுத்த வேதத்தை காக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார், வியாசர். வேதத்தை நான்காக வகுத்து, ரிக் வேதத்தை சுமந்து மகரிஷிக்கும், யஜூர் வேதத்தை வைசம்பாயனருக்கும், சாம வேதத்தை ஜைமினி முனிவருக் கும், அதர்வண வேதத்தை பைல ரிஷிக்கும் உபதேசித்தார். வேத விஷயங்களை சுவைபட மாற்றி, பதினெட்டு புராணங்களாகவும் மகாபாரதமாகவும் சமைத்தார். பிரம்ம சூத்திரம் படைத்தார். பக்தி ரசம் சொட்டும் ஸ்ரீமத் பாகவதத்தை தம் மகன் சுகப் பிரம்மரிஷி மூலமாக மனித சமுதாயத்திற்கு அளித்தார்.
இதைத் தொடர்ந்து சுகப்பிரம்ம ரிஷி, வியாச பகவானைப் பெருமைபடுத்தும் விதமாக, ஆடிப் பௌர்ணமி அன்று (இந்த ஆண்டு ஆடி பௌர்ணமி 22.7.2013) குருவை வழிபடும் ஞான மரபை தொடங்கி வைத்தார். ஆஷாட பூர்ணிமா, குருபூர்ணிமா, வியாசபூஜை என்றெல்லாம் பாரதம் நெடுக குரு வணக்க நாளாக இன்றும் இது பின்பற்றப்படுகிறது. இத்தனை மகத்துவம் மிக்க மகான் வியாசர், நைமிசாரண்ய முனிவர்களுடைய ஜாதுல்யா யாகத்தை நடத்தி வைக்கும் பொருட்டு பானுபுரம் வந்தார்.
இந்தத் தலத்தில் உறையும் ஈசனின் அருள் பிரவாகத்தில் நனைந்து இங்கேயே ஆசிரமம் அமைத்து, வேதத்தைக் காக்கும் பணிக்காக மிக அற்புதமான சீடர்களை உருவாக்கினார். வியாசர், இந்த ஊரில் வேதப் பாசறை அமைத்துச் செயல்பட்டதால், இப்பகுதி வியாசர்பாடியானது என்கிறது புராணம்.
சென்னை-எழும்பூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது, வியாசர்பாடி ரவீஸ்வரர் திருக்கோயில். அழகிய மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம். அடுத்து ஒரு சிறிய லிங்க வடிவ துவாரம் வழியே ஈசனை தரிசித்தபடி அமர்ந்திருக்கிறது, நந்தி.
பிராகார வலம் வர பக்த ஆஞ்சநேயர், அறுபத்திமூவர், தனிச் சந்நதிகளில் அருளும் சுந்தர விநாயகர், ராமலிங்க அடிகள், வேத வியாசர் ஆகியோரை தரிசிக்கலாம். கையில் ஓலைச்சுவடி தாங்கி, புலித்தோல் ஆசனத் தில் அமர்ந்து அருளும் இந்த வியாச முனிவரிடம் ஆசி பெற்ற பிறகே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள். பௌர்ணமியன்று இவருக்கு வில்வமாலை அணிவித்து, வழிபட கலைத்து றையில் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். தை மாதத்தில் ரத சப்தமியன்று, வியாசர் இங்கே ரவீஸ்வரரை பூஜிக்கிறார் என்பது நம்பிக்கை.
வியாசர் சந்நதிக்கு அருகில், ஸ்ரீதேவி-பூதேவியோடு அருள்கிறார், முனைக்காத்த பெருமாள். வியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து மேரு மலையில் எழுதினார். அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாதபடி பெருமாள் காத்தார். அதனாலேயே இவருக்கு முனைக்காத்த பெருமாள் என்று பெயர் வந்தது என்கிறார்கள். இந்த பெருமாளை வணங்கினால் அறிவை கூர்மையாக்கி அருள்கிறார். இவ ருக்கு அருகே நாகர்,
தல விருட்சமான வன்னிமரம், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், ஐயப்பன், காலபைரவர் ஆகியோரை தரிசித்து நவகிரக
வலம் வரலாம்.
தெற்கில் உள்ள வாயில் வழியே ஆலயத்தின் மகா மண்டபத்தினுள் செல்ல, கருணை பொங்கும் விழிகளோடு வரவேற்கிறாள், அன்னை மரகதாம் பிகை. குழந்தை வரம் வேண்டித் தவித்த விச்சாவரன் என்கிற மன்னனுக்காக, மகிழ மரத்தடியில் மகளாய் தோன்றிய அன்னை, மரகதாம்பிகையாக வளர்ந்து மகேசனின் கரம் பற்றினாள். இந்த அன்னையைப் பணிய கல்யாண வரமும், மழலை வரமும் உடனே கிடைக்கின்றன. சூரியனும் சந்திர னும் வணங்க, விநாயகரும் முருகனும் கருவறை வாசலில் காவலிருக்க, உள்ளே கோடிச் சூரியப் பிரகாசனாய் ரவீஸ்வரர் ஒளிர்கிறார்.
இவரை சூரியன் தினமும் தன் பொன்னிற கிரணங்களால் வணங்குகிறான். ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள், இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி இவரைப் பணிய, கைமேல் பலன் கிடைக்கும். வேத வியாசருக்கும் சூரியனுக்கும் அருளிய இந்த ரவீஸ்வரரைப் பணிய, நிச்சயம் பணம் வரும். பதவி வரும். பணிவு வரும். எல்லாவற்றையும் தாண்டி எது உண்மையான ஆனந்தம் எனும் ஞானத் தெளிவும் வரும். வியாச பகவான் பூஜித்த இந்த ஈசனை ஆடிப் பௌர்ணமியன்று தரிசிக்க, கலை, கல்வியில் சாதிக்கும் சக்தி கிடைக்கும். ஆலயத் தொடர்புக்கு: 044-42809104.
தன் மனைவியைத் தேடி புறப்பட்ட சூரியன், வழியில் பிரம்மனைக் காண்கிறான். கடுமையான சினத்தோடு அலையும் ஆதவன், படைப்புத் தலைவ னுக்கு தர வேண்டிய மரியாதையை தர மறந்தான். ஆதவனின் அலட்சியம் பிரம்மனின் கோபத்தைத் தூண்ட, ‘‘மனிதனாய் பூமியில் அலைந்து, சித்தம் தெளிந்தபின் தேவருலகம் வா’’ என சாபமிடுகிறார். சாபம் நீங்கி, மீண்டும் தேவராவது எப்படி எனக் கலங்கி நின்ற சூரியனுக்கு நாரதர் நல்வழியும் காட்டினார்: ‘‘பூலோகம் சென்று ஒரு வன்னி மரத்தடி யில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வா.
நீ இழந்த தேவ அந்தஸ்து திரும்ப கிடைக்கும்.’’ நாரதர் சொல்லை செயலாக்கிய சூரியன், சிவ தரி சனம் பெற்று சாப விமோசனம் பெற்றான். சூரியன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அந்த ஈசன் ரவீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்கிறார். இந்தத் தலமும் பானுபுரமானது. பானுபுரம் வியாசர்பாடியானது எப்படி? மீனவப் பெண்ணின் மகனாய் வந்து, வேதங்களை வகுத்தளித்தவர், வியாச பகவான். இவரது தந்தை பராசர முனிவர். வியாசரின் இயற்பெயர் கிருஷ் ணதுவைபாயனர். கலியுகத்தில் மனிதனுடைய அறிவாற்றல் குறைந்து, வேதத்தின்படியான வாழ்க்கை மறையத் தொடங்கும். உலகம் அதர்மத்தால் அவதிப்படும். எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்பதையே மனிதன் மறந்து, அறியாமையில் மூழ்கி கிடக்கும்படியாகிவிடும்.
இதை எல்லாம் மீறி மக்களுக்கு ஆன்ம விடுதலையில் வேட்கை ஏற்படுத்த வேதத்தை காக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார், வியாசர். வேதத்தை நான்காக வகுத்து, ரிக் வேதத்தை சுமந்து மகரிஷிக்கும், யஜூர் வேதத்தை வைசம்பாயனருக்கும், சாம வேதத்தை ஜைமினி முனிவருக் கும், அதர்வண வேதத்தை பைல ரிஷிக்கும் உபதேசித்தார். வேத விஷயங்களை சுவைபட மாற்றி, பதினெட்டு புராணங்களாகவும் மகாபாரதமாகவும் சமைத்தார். பிரம்ம சூத்திரம் படைத்தார். பக்தி ரசம் சொட்டும் ஸ்ரீமத் பாகவதத்தை தம் மகன் சுகப் பிரம்மரிஷி மூலமாக மனித சமுதாயத்திற்கு அளித்தார்.
இதைத் தொடர்ந்து சுகப்பிரம்ம ரிஷி, வியாச பகவானைப் பெருமைபடுத்தும் விதமாக, ஆடிப் பௌர்ணமி அன்று (இந்த ஆண்டு ஆடி பௌர்ணமி 22.7.2013) குருவை வழிபடும் ஞான மரபை தொடங்கி வைத்தார். ஆஷாட பூர்ணிமா, குருபூர்ணிமா, வியாசபூஜை என்றெல்லாம் பாரதம் நெடுக குரு வணக்க நாளாக இன்றும் இது பின்பற்றப்படுகிறது. இத்தனை மகத்துவம் மிக்க மகான் வியாசர், நைமிசாரண்ய முனிவர்களுடைய ஜாதுல்யா யாகத்தை நடத்தி வைக்கும் பொருட்டு பானுபுரம் வந்தார்.
இந்தத் தலத்தில் உறையும் ஈசனின் அருள் பிரவாகத்தில் நனைந்து இங்கேயே ஆசிரமம் அமைத்து, வேதத்தைக் காக்கும் பணிக்காக மிக அற்புதமான சீடர்களை உருவாக்கினார். வியாசர், இந்த ஊரில் வேதப் பாசறை அமைத்துச் செயல்பட்டதால், இப்பகுதி வியாசர்பாடியானது என்கிறது புராணம்.
சென்னை-எழும்பூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது, வியாசர்பாடி ரவீஸ்வரர் திருக்கோயில். அழகிய மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம். அடுத்து ஒரு சிறிய லிங்க வடிவ துவாரம் வழியே ஈசனை தரிசித்தபடி அமர்ந்திருக்கிறது, நந்தி.
பிராகார வலம் வர பக்த ஆஞ்சநேயர், அறுபத்திமூவர், தனிச் சந்நதிகளில் அருளும் சுந்தர விநாயகர், ராமலிங்க அடிகள், வேத வியாசர் ஆகியோரை தரிசிக்கலாம். கையில் ஓலைச்சுவடி தாங்கி, புலித்தோல் ஆசனத் தில் அமர்ந்து அருளும் இந்த வியாச முனிவரிடம் ஆசி பெற்ற பிறகே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள். பௌர்ணமியன்று இவருக்கு வில்வமாலை அணிவித்து, வழிபட கலைத்து றையில் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். தை மாதத்தில் ரத சப்தமியன்று, வியாசர் இங்கே ரவீஸ்வரரை பூஜிக்கிறார் என்பது நம்பிக்கை.
வியாசர் சந்நதிக்கு அருகில், ஸ்ரீதேவி-பூதேவியோடு அருள்கிறார், முனைக்காத்த பெருமாள். வியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து மேரு மலையில் எழுதினார். அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாதபடி பெருமாள் காத்தார். அதனாலேயே இவருக்கு முனைக்காத்த பெருமாள் என்று பெயர் வந்தது என்கிறார்கள். இந்த பெருமாளை வணங்கினால் அறிவை கூர்மையாக்கி அருள்கிறார். இவ ருக்கு அருகே நாகர்,
தல விருட்சமான வன்னிமரம், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், ஐயப்பன், காலபைரவர் ஆகியோரை தரிசித்து நவகிரக
வலம் வரலாம்.
தெற்கில் உள்ள வாயில் வழியே ஆலயத்தின் மகா மண்டபத்தினுள் செல்ல, கருணை பொங்கும் விழிகளோடு வரவேற்கிறாள், அன்னை மரகதாம் பிகை. குழந்தை வரம் வேண்டித் தவித்த விச்சாவரன் என்கிற மன்னனுக்காக, மகிழ மரத்தடியில் மகளாய் தோன்றிய அன்னை, மரகதாம்பிகையாக வளர்ந்து மகேசனின் கரம் பற்றினாள். இந்த அன்னையைப் பணிய கல்யாண வரமும், மழலை வரமும் உடனே கிடைக்கின்றன. சூரியனும் சந்திர னும் வணங்க, விநாயகரும் முருகனும் கருவறை வாசலில் காவலிருக்க, உள்ளே கோடிச் சூரியப் பிரகாசனாய் ரவீஸ்வரர் ஒளிர்கிறார்.
இவரை சூரியன் தினமும் தன் பொன்னிற கிரணங்களால் வணங்குகிறான். ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள், இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி இவரைப் பணிய, கைமேல் பலன் கிடைக்கும். வேத வியாசருக்கும் சூரியனுக்கும் அருளிய இந்த ரவீஸ்வரரைப் பணிய, நிச்சயம் பணம் வரும். பதவி வரும். பணிவு வரும். எல்லாவற்றையும் தாண்டி எது உண்மையான ஆனந்தம் எனும் ஞானத் தெளிவும் வரும். வியாச பகவான் பூஜித்த இந்த ஈசனை ஆடிப் பௌர்ணமியன்று தரிசிக்க, கலை, கல்வியில் சாதிக்கும் சக்தி கிடைக்கும். ஆலயத் தொடர்புக்கு: 044-42809104.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி
» அக்னி பூஜித்த அரன்
» அமுதம் வழங்கிய ஈசன்
» லட்சியம் தரும் லட்சுமி
» பார்வையை மீட்டுத் தந்த பரமன்
» அக்னி பூஜித்த அரன்
» அமுதம் வழங்கிய ஈசன்
» லட்சியம் தரும் லட்சுமி
» பார்வையை மீட்டுத் தந்த பரமன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya