Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஐஸ்வர்யங்கள் வாரி வழங்கும் ஐயனார்

Go down

ஐஸ்வர்யங்கள் வாரி வழங்கும் ஐயனார் Empty ஐஸ்வர்யங்கள் வாரி வழங்கும் ஐயனார்

Post by oviya Wed Dec 10, 2014 1:25 pm

காடந்தேத்தி ஐயனார் கோயில்

ஆதியில் மஹா சாஸ்தா காடந்தேத்தி தலத்தில் ஓர் வில்வ மரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார். அதனை அறிந்த சத்திய பூரண மஹரிஷி இத்
தலத்தை அடைந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய பகவானுக்கு Ôஆதிநாதன்Õ என்று திருநாம மிட்டு ஆலயத்தை நிர்மாணித்து வழிபட்டார். பிற்காலத் தில் பிரம்மா, மஹாசாஸ்தாவிற்கும், பிரபாவதி தேவியாருக்கும் திருமகனாக அவதரித்தார். ஆதிநாதன் என்ற திருநாமத்தினை தவிர ஆதீனமழையார், ஆதீனமுடையார், அவிமுக்தேஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், திருமணவாளமுடையார் என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.

தர்மரட்சகராகிய சத்தியக மூர்த்தி அசுர ராஜனாகிய வஜ்ரமாலியை கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் ஒரு தடாகத்தை ஏற்படுத்தி ஐயனாரப்பனை பூஜித்து நற்பேறு பெற்றார். அவர் உருவாக்கிய Ôசத்தியக தீர்த்தம்Õ என்ற தடாகத்தில் நீராடி பகவானை ஆராதிப்பவர்கள் பெறும் புண்ணியப் பலனை அளவிட்டுக் கூற இயலாது. சனீஸ்வர பகவான் இத்தலத்தில் உறையும் ஹரிஹரபுத்ரனை பெரும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து கிரக பதவி அடைந்தார். சனீஸ்வரனது அசாத்தியமான பக்தியில் மயங்கிய ஹரிஹரபுத்ரர் அவரது தினமான சனிக்கிழ மையையே தனக்கு விருப்பமான தினமாகக் கொண்டுள்ளார்.

அத்தினத்தில் தனது சந்நதி முன் எள் தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர் களுடைய அனைத்து தடைகளையும் நீக்குகிறார். சகலவித செல்வங்களையும் சுகங்களையும் வாரி வழங்குகிறார். புதன் மூர்த்தியும் இத்தலத்தில் உறையும் பகவானை ஆராதித்து கிரக பதவியைப் பெற்றார். அவரது தினமான புதன் கிழமைகளில் ஹரிஹரபுத்ரரை ஆராதிப்பவர்கள் திவ்யமான ஞானம், நிர்வாகத்திறன், மன அமைதி ஆகியவற்றை பெற்று மகிழ்கின்றனர்.
மஹாசாஸ்தாவின் ஜென்ம நட்சத்திரமாகிய உத்திர நட்சத்திர தினங்களில் பகவானுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து ஆராதனை செய்கிறார்கள்.

லாடமூர்த்தி என்ற பரம பக்தனுக்கு மஹாசாஸ்தா தனது திருமணக் கோலங்களை காட்டியருளினார். அரிச்சந்திரன், அகத்தியர் போன்றவர்கள் இத்த லத்தில் பகவானை ஆராதித்து மகிழ்ந்திருக்கிறார்கள். விதி வசத்தால் அரசுரிமையிழந்த வீரசேனன் என்ற சோழ மன்னன் ஐயனை ஆராதித்து அதனை மீண்டும் பெற்றதுடன் பகவான் அருளால் இப்பூமி முழுவதையும் வென்று ஏகராஜனாக அரசாட்சி செய்தான்; இத்தலத்தையே தனது தலைநகராகக் கொண்டதால், இத்தலம் ஏகராஜபுரம் எனவும் ஏகக்ஷத்திரியபுரம் என வும் பெயர் பெற்று விளங்கலாயிற்று.

ஒரு சமயம் ஈரேழு உலகங்களையும் கட்டி ஆண்ட காடன் என்ற கொடிய அசுரேந்திரன் பகவான் மகாசாஸ்தாவோடு போரிட்டபோது பகவானது திருச் சாட்டையினால் தூக்கியெறியப்பட்டான். இத்தலத்தில் வந்து விழுந்து இந்தப் புண்ணியத் தலத்தில் அவரது கணங்களின் தலைவனானான். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் அமைந்துள்ளது காடந்தேத்தி என்ற திருத்தலம்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum