திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம், ஆண்டாள் பிறந்தநாளான பூர தினத்தன்று தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும், கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.
திருவிழாவைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவில்லிபுத்தூர் வந்திருந்தனர். இதனால், நகரமே களைகட்டியிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர தினமான நேற்று காலை 8.05 மணிக்கு துவங்கியது. முன்னதாக, அதிகாலை யில் வேத விற்பன்னர்கள் புடை சூழ, மேள தாளங்கள் முழங்க ஆண்டாள், ரங்கமன்னார் தேருக்கு அழைத்து வரப்பட்டனர்.
தேரில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. காலை 8.05 மணிக்கு பக்தர்களின் ‘கோவிந்தா... கோபாலா...’ கோஷங்கள் விண்ணதிர, தேரோட்டம் துவங்கியது. அமைச்சர்கள், செந்தூர் பாண்டியன், ராஜேந்திரபாலாஜி, வைகைசெல்வன், கலெக்டர் ஹரிஹரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆண், பெண் பக்தர்களுக்கு என தனித்தனியாக வடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்குக் கிளம்பிய ஆண்டாள் தேர் காலை 10.50 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
போலீசார் தீவிர கண்காணிப்பு
ஆண்டாள் தேரோட்டத்தைக் காண, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் ஐந்து டிஎஸ்பிக்கள் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மப்டியிலும் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். நான்கு ரத வீதிகளிலும் சுழலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, கண்காணித்தனர்.
திருவிழாவைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவில்லிபுத்தூர் வந்திருந்தனர். இதனால், நகரமே களைகட்டியிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர தினமான நேற்று காலை 8.05 மணிக்கு துவங்கியது. முன்னதாக, அதிகாலை யில் வேத விற்பன்னர்கள் புடை சூழ, மேள தாளங்கள் முழங்க ஆண்டாள், ரங்கமன்னார் தேருக்கு அழைத்து வரப்பட்டனர்.
தேரில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. காலை 8.05 மணிக்கு பக்தர்களின் ‘கோவிந்தா... கோபாலா...’ கோஷங்கள் விண்ணதிர, தேரோட்டம் துவங்கியது. அமைச்சர்கள், செந்தூர் பாண்டியன், ராஜேந்திரபாலாஜி, வைகைசெல்வன், கலெக்டர் ஹரிஹரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆண், பெண் பக்தர்களுக்கு என தனித்தனியாக வடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்குக் கிளம்பிய ஆண்டாள் தேர் காலை 10.50 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
போலீசார் தீவிர கண்காணிப்பு
ஆண்டாள் தேரோட்டத்தைக் காண, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் ஐந்து டிஎஸ்பிக்கள் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மப்டியிலும் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். நான்கு ரத வீதிகளிலும் சுழலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, கண்காணித்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயில் தேரோட்டம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
» வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயில் தேரோட்டம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya