குரு பகவான் ஜெயந்தி : பதவி யோகம் தரும் பிரகஸ்பதி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குரு பகவான் ஜெயந்தி : பதவி யோகம் தரும் பிரகஸ்பதி
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுபகிரகம் என்ற அமைப்பையும் பெருமையையும் பெற்ற ஒரே கிரகம் பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான் ஆவார். இவர் தேவர்களுக்கெல்லாம் தலைவன். நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், இரண்டாவது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவிற்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம் கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.
குருபலம்
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமண பந்தத்திற்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. பெரும்பாலோர் குரு பலம் வந்துவிட்டதா என்று பார்த்தபிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.
பார்வை பலம்
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும் விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5, 7, 9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
ஸ்தான தோஷம்
குருபகவான் முழு சுபகிரகமாக இருப்பதால், ஜோதிட சாஸ்திர விதிப்படி அவருக்கு ஸ்தான கேந்திராதி பத்திய தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும். குறிப்பாக லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு ஆகிய வீடுகளில் தனித்து இருக்கக்கூடாது. தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான். “அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு“ என்ற ஜோதிட மொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஸ்தான, ஆதிபத்தியம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு அந்த ஒரு பலமே போதுமானது.
கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள், தானாக தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார். மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதாகாலட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல். அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம் அமைத்தல் போன்ற பாக்யத்தை அருள்வார். தலை சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே. கல்வித்துறை, நிதி, வங்கி, பைனான்ஸ், நீதித்துறை போன்றவற்றில் பணி செய்யக் கூடிய பாக்யத்தை அருள்பவரும் குருபகவானே.
வழிபாடு - பரிகாரம்
குருபகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று வணங்கலாம். குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருவிற்குரிய சிறப்பு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி குருஸ்தலமாகும். எல்லா சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்யம் செய்து வணங்கி வழிபடலாம். ‘ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லிவர தடை, தடங்கல்கள் நீங்கும்.
குருவின் அம்சங்கள்
கிழமை : வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
நிறம் : தூய மஞ்சள்
ரத்தினம் : கனக புஷ்பராகம்
உலோகம் : பொன் (தங்கம்)
தானியம் : கொண்டைக்கடலை
ஆடை : மஞ்சள்
சொந்த வீடு : தனுசு - மீனம்
உச்ச வீடு : கடகம்
நீச்ச வீடு : மகரம்
திசா காலம் : 16 வருடங்கள்
அதிதேவதை : தட்சிணாமூர்த்தி.
குருபலம்
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமண பந்தத்திற்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. பெரும்பாலோர் குரு பலம் வந்துவிட்டதா என்று பார்த்தபிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.
பார்வை பலம்
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும் விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5, 7, 9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
ஸ்தான தோஷம்
குருபகவான் முழு சுபகிரகமாக இருப்பதால், ஜோதிட சாஸ்திர விதிப்படி அவருக்கு ஸ்தான கேந்திராதி பத்திய தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும். குறிப்பாக லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு ஆகிய வீடுகளில் தனித்து இருக்கக்கூடாது. தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான். “அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு“ என்ற ஜோதிட மொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஸ்தான, ஆதிபத்தியம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு அந்த ஒரு பலமே போதுமானது.
கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள், தானாக தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார். மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதாகாலட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல். அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம் அமைத்தல் போன்ற பாக்யத்தை அருள்வார். தலை சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே. கல்வித்துறை, நிதி, வங்கி, பைனான்ஸ், நீதித்துறை போன்றவற்றில் பணி செய்யக் கூடிய பாக்யத்தை அருள்பவரும் குருபகவானே.
வழிபாடு - பரிகாரம்
குருபகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று வணங்கலாம். குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருவிற்குரிய சிறப்பு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி குருஸ்தலமாகும். எல்லா சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்யம் செய்து வணங்கி வழிபடலாம். ‘ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லிவர தடை, தடங்கல்கள் நீங்கும்.
குருவின் அம்சங்கள்
கிழமை : வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
நிறம் : தூய மஞ்சள்
ரத்தினம் : கனக புஷ்பராகம்
உலோகம் : பொன் (தங்கம்)
தானியம் : கொண்டைக்கடலை
ஆடை : மஞ்சள்
சொந்த வீடு : தனுசு - மீனம்
உச்ச வீடு : கடகம்
நீச்ச வீடு : மகரம்
திசா காலம் : 16 வருடங்கள்
அதிதேவதை : தட்சிணாமூர்த்தி.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பதவி, அதிகாரம் தரும் குரு பகவான்
» சனி ஜெயந்தி : வளமான வாழ்வு தரும் சனி பகவான்
» சகல யோகம் அருளும் சந்திர பகவான்
» திருமண யோகம் தரும் திருமாணிக்குழி ஈஸ்வரன்
» வாகன யோகம் தரும் லட்சுமி தேர் வழிபாடு
» சனி ஜெயந்தி : வளமான வாழ்வு தரும் சனி பகவான்
» சகல யோகம் அருளும் சந்திர பகவான்
» திருமண யோகம் தரும் திருமாணிக்குழி ஈஸ்வரன்
» வாகன யோகம் தரும் லட்சுமி தேர் வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya