Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


செவ்வாய் ஜெயந்தி : அழியாத புகழ் தரும் அங்காரகன்

Go down

செவ்வாய் ஜெயந்தி : அழியாத புகழ் தரும் அங்காரகன் Empty செவ்வாய் ஜெயந்தி : அழியாத புகழ் தரும் அங்காரகன்

Post by oviya Wed Dec 10, 2014 1:45 pm

இறையருளை பெறவும் கிரக தோஷ பீடைகளில் இருந்து விடுபடவும் விரதங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள் எல்லாம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன் உடலும் உள்ளமும் தூய்மையாகி அமைதியும் சந்தோஷமும் கிடைக்கிறது. தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். மங்களன், அங்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

நெருப்புக்கு அதிபதியான செவ்வாய் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கிறார். வீரதீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத் திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை, உயர்பதவி, தலைமை பொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடிய வல்லமை பெற்றது செவ்வாய் கிரகம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அரசாங்க உயர் பதவிக்கு அனுக்கிரகம் செய்வதும் செவ்வாய் தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர்.

போட்டி, பந்தயங்கள், உடல் திறன், சாகச நிகழ்ச்சிகளில் புகழ் பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக இருப்பவர் செவ்வாய். செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். இவருக்கு சகோதர காரகன் என்ற பெயரும் உண்டு. சகோதர, சகோதரிகளின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்மானிக்கிற கிரகமும் இதுதான். செவ்வாய்க்கு பூமிகாரகன் என்ற அமைப்பும் உள்ளது. இவரது தயவு இருந்தால்தான் நிலம், தோட்டம், எஸ்டேட், வீடு, பங்களா போன்ற அசையா சொத்துக்களை பெற முடியும்.

செவ்வாயின் அருள் பார்வை இருந்தால்தான் ரியல் எஸ்டேட், கட்டிட தொழில், சிவில் இன்ஜினியர் போன்ற தொழில்களில் சிறக்கலாம். திருமண விஷயத்தில் செவ்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்ற அமைப்பை உண்டாக்குபவர். லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று பெயர். இத்தகைய அமைப்பு உடைய ஜாதகங்களை அதே போன்று செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே சிறந்த பரிகாரம்.

செவ்வாயின் அம்சங்கள்

கிழமை : செவ்வாய்
தேதிகள் : 9, 18, 27.
நட்சத்திரம் : மிருகசீரிஷம்,
சித்திரை, அவிட்டம்.
ராசி : மேஷம், விருச்சிகம்.
உச்சம் : மகரம்
நீச்சம் : கடகம்
நிறம் : சிவப்பு
தானியம் : துவரை
ஆடை : சிவப்பு
ரத்தினம் : பவளம்

வழிபாடு - பரிகாரம்

செவ்வாய்க்குரிய கடவுள் முருகப் பெருமான். எல்லா முருகன் ஸ்தலங்களும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப் பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் முக்கிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும் பின்பும் இங்கு வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

நவதிருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசிப்பதால் சொத்து பிரச்னைகள், சகோதர பிரச்னைகள், ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ், முருகன் துதிப்பாடல்களை பாடி முருகனையும் செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் தோஷங்கள், தடைகள் நீங்கி சற்புத்திர யோகமும், பூமி பாக்யமும் கிடைக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum