Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்

Go down

கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார் Empty கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்

Post by oviya Wed Dec 10, 2014 1:46 pm

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காலத்தை வரையறுக்க முடியாத அளவுக்கு பழமை வாய்ந்தது. இந்தத் தலநாயகனான தியாகராஜர் ஓடம்போக்கி ஆற்றில் நீராடச் செல்லும் வழியான திருமஞ்சன வீதியில் பெருநாட்டுப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. ஓடம்போக்கி ஆற்றில் நீராடுபவர்கள் திருமஞ்சனவீதி வழியாக பெரிய கோயிலின் தெற்கு ராஜகோபுர வழியைப் பயன்படுத்தி பெரிய கோயிலுக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது வழியில் அருள்பாலிக்கும் விநாயகரை 'பெருநாட்டுப் பிள்ளையார்' என்றும், முருகன் தரிசனம் தரும் கோயிலை 'குமரக்கோட்டம்' என்றும் அழைத்தார்கள்.

நாளடைவில் ஆற்றங்கரை மண்டபம் புதர்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டதால் ஆற்று நீர் மாசடைந்ததுடன் நீர் வரத்தும் குறைந்தது. அதனாலேயே
பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு பிறகு தியாகேசனை தரிசனம் செய்யும் பழக்கம் மறைந்து போயிருக்க வேண்டும். ஆனால், திருமஞ்சனவீதியும், காரைக்காட்டுத் தெருவும் சந்திக்கும் நாற்சந்தியில் அமர்ந்து அருள்புரிந்து வரும் பெருநாட்டுப் பிள்ளையார் பக்தர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் தாமரை வடிவ
பீடத்தில் அமர்ந்திருக்கிறார். சாலை மட்டத்திற்கு சற்றுத் தாழ்வாகவே இந்தக் கோயில் அமைந்திருப்பதால் பாதாள விநாயகர் என்றும், மூலாதார மூர்த்தியாக இருப்பதால் மூலாதாரப் பிள்ளையார் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

காரைக்காட்டு வேளாளர்கள் இப்பகுதியில் அதிகமாக வசித்ததால் காரைக்காட்டுத் தெருவாகவும், அவர்கள் வசித்த பகுதியை பெருநாடாக மதித்ததால் பிள்ளையாரை பெருநாட்டுப் பிள்ளையார் என்றும் அழைத்தார்கள். முற்றிலும் சிதிலமடைந்திருந்த, பத்து பேர்கூட வசதியாக நின்று சுவாமி தரிசனம்
செய்ய இயலாதிருந்த இந்த ஆலயம் இப்போது முழுவதுமாகப் புனரமைக்கப்பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டரை அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது கலசங்கள் பளபளக்க கும்பாபிஷேகம் இனிதே நடந்து நிறைவடைந்திருக்கிறது.

சங்கடஹர சதுர்த்தி, சுக்ல சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தொழிலில் அபிவிருத்தி அடைய வேண்டி இவரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் பெருநாட்டுப் பிள்ளையார், அந்த பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றித் தருகிறார் என்று பரவசத்தோடு பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத் தொடர்புக்கு: தொலைபேசி எண். 9750611371.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum