கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்
திருவாரூர்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காலத்தை வரையறுக்க முடியாத அளவுக்கு பழமை வாய்ந்தது. இந்தத் தலநாயகனான தியாகராஜர் ஓடம்போக்கி ஆற்றில் நீராடச் செல்லும் வழியான திருமஞ்சன வீதியில் பெருநாட்டுப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. ஓடம்போக்கி ஆற்றில் நீராடுபவர்கள் திருமஞ்சனவீதி வழியாக பெரிய கோயிலின் தெற்கு ராஜகோபுர வழியைப் பயன்படுத்தி பெரிய கோயிலுக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது வழியில் அருள்பாலிக்கும் விநாயகரை 'பெருநாட்டுப் பிள்ளையார்' என்றும், முருகன் தரிசனம் தரும் கோயிலை 'குமரக்கோட்டம்' என்றும் அழைத்தார்கள்.
நாளடைவில் ஆற்றங்கரை மண்டபம் புதர்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டதால் ஆற்று நீர் மாசடைந்ததுடன் நீர் வரத்தும் குறைந்தது. அதனாலேயே
பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு பிறகு தியாகேசனை தரிசனம் செய்யும் பழக்கம் மறைந்து போயிருக்க வேண்டும். ஆனால், திருமஞ்சனவீதியும், காரைக்காட்டுத் தெருவும் சந்திக்கும் நாற்சந்தியில் அமர்ந்து அருள்புரிந்து வரும் பெருநாட்டுப் பிள்ளையார் பக்தர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் தாமரை வடிவ
பீடத்தில் அமர்ந்திருக்கிறார். சாலை மட்டத்திற்கு சற்றுத் தாழ்வாகவே இந்தக் கோயில் அமைந்திருப்பதால் பாதாள விநாயகர் என்றும், மூலாதார மூர்த்தியாக இருப்பதால் மூலாதாரப் பிள்ளையார் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
காரைக்காட்டு வேளாளர்கள் இப்பகுதியில் அதிகமாக வசித்ததால் காரைக்காட்டுத் தெருவாகவும், அவர்கள் வசித்த பகுதியை பெருநாடாக மதித்ததால் பிள்ளையாரை பெருநாட்டுப் பிள்ளையார் என்றும் அழைத்தார்கள். முற்றிலும் சிதிலமடைந்திருந்த, பத்து பேர்கூட வசதியாக நின்று சுவாமி தரிசனம்
செய்ய இயலாதிருந்த இந்த ஆலயம் இப்போது முழுவதுமாகப் புனரமைக்கப்பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டரை அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது கலசங்கள் பளபளக்க கும்பாபிஷேகம் இனிதே நடந்து நிறைவடைந்திருக்கிறது.
சங்கடஹர சதுர்த்தி, சுக்ல சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தொழிலில் அபிவிருத்தி அடைய வேண்டி இவரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் பெருநாட்டுப் பிள்ளையார், அந்த பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றித் தருகிறார் என்று பரவசத்தோடு பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத் தொடர்புக்கு: தொலைபேசி எண். 9750611371.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காலத்தை வரையறுக்க முடியாத அளவுக்கு பழமை வாய்ந்தது. இந்தத் தலநாயகனான தியாகராஜர் ஓடம்போக்கி ஆற்றில் நீராடச் செல்லும் வழியான திருமஞ்சன வீதியில் பெருநாட்டுப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. ஓடம்போக்கி ஆற்றில் நீராடுபவர்கள் திருமஞ்சனவீதி வழியாக பெரிய கோயிலின் தெற்கு ராஜகோபுர வழியைப் பயன்படுத்தி பெரிய கோயிலுக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது வழியில் அருள்பாலிக்கும் விநாயகரை 'பெருநாட்டுப் பிள்ளையார்' என்றும், முருகன் தரிசனம் தரும் கோயிலை 'குமரக்கோட்டம்' என்றும் அழைத்தார்கள்.
நாளடைவில் ஆற்றங்கரை மண்டபம் புதர்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டதால் ஆற்று நீர் மாசடைந்ததுடன் நீர் வரத்தும் குறைந்தது. அதனாலேயே
பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு பிறகு தியாகேசனை தரிசனம் செய்யும் பழக்கம் மறைந்து போயிருக்க வேண்டும். ஆனால், திருமஞ்சனவீதியும், காரைக்காட்டுத் தெருவும் சந்திக்கும் நாற்சந்தியில் அமர்ந்து அருள்புரிந்து வரும் பெருநாட்டுப் பிள்ளையார் பக்தர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் தாமரை வடிவ
பீடத்தில் அமர்ந்திருக்கிறார். சாலை மட்டத்திற்கு சற்றுத் தாழ்வாகவே இந்தக் கோயில் அமைந்திருப்பதால் பாதாள விநாயகர் என்றும், மூலாதார மூர்த்தியாக இருப்பதால் மூலாதாரப் பிள்ளையார் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
காரைக்காட்டு வேளாளர்கள் இப்பகுதியில் அதிகமாக வசித்ததால் காரைக்காட்டுத் தெருவாகவும், அவர்கள் வசித்த பகுதியை பெருநாடாக மதித்ததால் பிள்ளையாரை பெருநாட்டுப் பிள்ளையார் என்றும் அழைத்தார்கள். முற்றிலும் சிதிலமடைந்திருந்த, பத்து பேர்கூட வசதியாக நின்று சுவாமி தரிசனம்
செய்ய இயலாதிருந்த இந்த ஆலயம் இப்போது முழுவதுமாகப் புனரமைக்கப்பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டரை அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது கலசங்கள் பளபளக்க கும்பாபிஷேகம் இனிதே நடந்து நிறைவடைந்திருக்கிறது.
சங்கடஹர சதுர்த்தி, சுக்ல சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தொழிலில் அபிவிருத்தி அடைய வேண்டி இவரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் பெருநாட்டுப் பிள்ளையார், அந்த பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றித் தருகிறார் என்று பரவசத்தோடு பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத் தொடர்புக்கு: தொலைபேசி எண். 9750611371.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
» வரம் தரும் புருஷோத்தமன் விரதம்
» வரம் தந்து காத்திடும் வாராகி அம்மன்
» மழலை வரம் தந்து மகிழ்விக்கும் மன்னார் சுவாமி
» குழந்தை வரம் தரும் ராமகிரி-ஸ்ரீகால பைரவர்
» வரம் தரும் புருஷோத்தமன் விரதம்
» வரம் தந்து காத்திடும் வாராகி அம்மன்
» மழலை வரம் தந்து மகிழ்விக்கும் மன்னார் சுவாமி
» குழந்தை வரம் தரும் ராமகிரி-ஸ்ரீகால பைரவர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya