Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்ற மஹிந்த - சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு

Go down

பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்ற மஹிந்த - சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு Empty பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்ற மஹிந்த - சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு

Post by oviya Thu Dec 11, 2014 1:28 pm

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்ல முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிவட்டார். அஸ்கிரிய -மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றார்.
அடுத்து கண்டி மீராம்மக்காம் பள்ளிவாசலில் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி கண்டி மீராம்மக்காம் பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்ரப் மௌலவி இந்த துஆ பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த,கெஹெலிய ரம்புக்வெல்ல ,ஜீ.எல்.பீரிஸ் ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ,பிரதி அமைச்சர் அப்துல் காதர்,பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்த ,திலும் அமுனுகமஇ ஜனாதிபதியின் செயலகப்பிரதானி காமினி செனரத் ஆகியோரும் இந்த சமய நிகழ்வுகளில் கலந்துக் கொண்டனர்.







ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினால் சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்காக அனுராதபுரம் மற்றும் பொலனறுவை பஸ் டிப்போக்களின் 115 பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியர் போக்குவரத்து செய்வதில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் காணப்படும் 125 பஸ்களில் 85 பஸ்களும் பொலனறுவையில் 60 பஸ்களில் 30 பஸ்களும் கட்சி ஆதரவாளர்களை போக்குவரத்து செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கபே குற்றம் சுமத்தியுள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மைத்திரிபால சிறிசேன தலதா மாளிகையை வழிபட்டார்: தேரரிடமும் ஆசீர்வாதம்
» மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டம்: பொலிஸாரின் அடாவடி
» சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு
» மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவை சென்று தேர்தல் பிரச்சாரம்
» வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum