கிழவி அம்மன் கோயில்!
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கிழவி அம்மன் கோயில்!
தலைப்பை படித்துவிட்டு, ‘ஆன்மிகமா’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்தச் செய்தி ஆன்மிகம் மட்டுமல்ல, சமூக பண்பாடும் சார்ந்தது. மதுரை மேலூரில் சாலையின் மேல் அமைந்துள்ளது கிழவி அம்மன் கோயில். சுற்றிலுமுள்ள 18 பட்டியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில் இது. அதுமட்டுமல்ல... அச்சமூகத்தை சேர்ந்த 7 கரைகளின் குலதெய்வமும் இந்த ‘கிழவி அம்மன்’தான். சாதி, மத, பேதமின்றி குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு நெகிழ்ச்சியானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த வயதான தம்பதி வாழ்ந்து வந்தனர். கிழவியின் ஊர் மேலூர் அருகேயுள்ள சூரைகுண்டு. கிழவனின் ஊர் முன்றவன் கூட்டம். இவர்களுக்கு 60 வயதாகியும் குழந்தையில்லை. விரக்தியடைந்த கிழவன், ஒரு சந்தர்ப்பத்தில் கிழவியை திட்டி அவர்களது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால் மனமுடைந்த கிழவி, தாய் வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள அழிசி மர நிழலில் அமர்ந்து அய்யனாரை நினைத்து வேண்டியிருக்கிறார்.
அந்த சமயம், அய்யனார் ஒரு சிறுவன் வடிவில் வந்து, ‘நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ.எல்லாம் சரியாகி விடும்’ என ஆறுதல் கூறியிருக்கிறார். சிறுவன் என்றாலும் அவன் சொன்ன தொனிக்கு கட்டுப்பட்டு, கிழவியும் தன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறார். வழியில் அவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. பயந்து போன கிழவி, பிறந்த வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியிருக்கிறார். கோடங்கி அடித்துப் பார்த்ததில், சிறுவனாக வந்தது அய்யனார் என்று தெரிய வந்திருக்கிறது. கிழவி மட்டுமல்ல, நடந்ததற்காக வருந்தி தன் மனைவியை பார்க்க வந்த கிழவனும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
கையோடு கிழவியை தன்னுடன் அழைத்துச் சென்றார் கிழவன். அய்யனார் வாக்களித்தபடியே இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அய்யனாரே வந்து அருளியதற்காகவும், 60 வயதுக்குப் பிறகு 3 குழந்தைகளை பெற்றதற்காகவும் கிழவியை தெய்வமாகவே நினைத்து பகுதி மக்கள் வழிபட ஆரம்பித்தனர். ‘‘இங்க வந்து குழந்தை இல்லாதவங்க கும்பிட்டா, நிச்சயம் குழந்தை பிறக்கும். தனக்கு ஆறுதல் சொன்னது அய்யனார்தான்னு தெரிஞ்சதும், எந்த இடத்துல தனக்கு ஆறுதல் கிடைச்சுதோ, அந்த இடத்துல அய்யனாருக்கு கோயில் எழுப்பி, தான் வாழ்ந்த காலம் முழுக்க ஆண்டு தோறும் மண்ணுல குதிரை வைச்சு கிழவி வழிபட்டாங்க. அதை நாங்களும் விடாம செஞ்சுகிட்டு இருக்கோம்’’என்கிறார் கோயில் பூசாரி.
இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு நெகிழ்ச்சியானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த வயதான தம்பதி வாழ்ந்து வந்தனர். கிழவியின் ஊர் மேலூர் அருகேயுள்ள சூரைகுண்டு. கிழவனின் ஊர் முன்றவன் கூட்டம். இவர்களுக்கு 60 வயதாகியும் குழந்தையில்லை. விரக்தியடைந்த கிழவன், ஒரு சந்தர்ப்பத்தில் கிழவியை திட்டி அவர்களது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால் மனமுடைந்த கிழவி, தாய் வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள அழிசி மர நிழலில் அமர்ந்து அய்யனாரை நினைத்து வேண்டியிருக்கிறார்.
அந்த சமயம், அய்யனார் ஒரு சிறுவன் வடிவில் வந்து, ‘நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ.எல்லாம் சரியாகி விடும்’ என ஆறுதல் கூறியிருக்கிறார். சிறுவன் என்றாலும் அவன் சொன்ன தொனிக்கு கட்டுப்பட்டு, கிழவியும் தன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறார். வழியில் அவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. பயந்து போன கிழவி, பிறந்த வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியிருக்கிறார். கோடங்கி அடித்துப் பார்த்ததில், சிறுவனாக வந்தது அய்யனார் என்று தெரிய வந்திருக்கிறது. கிழவி மட்டுமல்ல, நடந்ததற்காக வருந்தி தன் மனைவியை பார்க்க வந்த கிழவனும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
கையோடு கிழவியை தன்னுடன் அழைத்துச் சென்றார் கிழவன். அய்யனார் வாக்களித்தபடியே இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அய்யனாரே வந்து அருளியதற்காகவும், 60 வயதுக்குப் பிறகு 3 குழந்தைகளை பெற்றதற்காகவும் கிழவியை தெய்வமாகவே நினைத்து பகுதி மக்கள் வழிபட ஆரம்பித்தனர். ‘‘இங்க வந்து குழந்தை இல்லாதவங்க கும்பிட்டா, நிச்சயம் குழந்தை பிறக்கும். தனக்கு ஆறுதல் சொன்னது அய்யனார்தான்னு தெரிஞ்சதும், எந்த இடத்துல தனக்கு ஆறுதல் கிடைச்சுதோ, அந்த இடத்துல அய்யனாருக்கு கோயில் எழுப்பி, தான் வாழ்ந்த காலம் முழுக்க ஆண்டு தோறும் மண்ணுல குதிரை வைச்சு கிழவி வழிபட்டாங்க. அதை நாங்களும் விடாம செஞ்சுகிட்டு இருக்கோம்’’என்கிறார் கோயில் பூசாரி.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
» ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» துர்க்கை அம்மன் துர்க்கை அம்மன்
» ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் உருவான வரலாறு
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» துர்க்கை அம்மன் துர்க்கை அம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya