Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கிழவி அம்மன் கோயில்!

Go down

கிழவி  அம்மன்   கோயில்! Empty கிழவி அம்மன் கோயில்!

Post by oviya Thu Dec 11, 2014 1:41 pm

தலைப்பை படித்துவிட்டு, ‘ஆன்மிகமா’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்தச் செய்தி ஆன்மிகம் மட்டுமல்ல, சமூக பண்பாடும் சார்ந்தது. மதுரை மேலூரில் சாலையின் மேல் அமைந்துள்ளது கிழவி அம்மன் கோயில். சுற்றிலுமுள்ள 18 பட்டியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில் இது. அதுமட்டுமல்ல... அச்சமூகத்தை சேர்ந்த 7 கரைகளின் குலதெய்வமும் இந்த ‘கிழவி அம்மன்’தான். சாதி, மத, பேதமின்றி குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு நெகிழ்ச்சியானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த வயதான தம்பதி வாழ்ந்து வந்தனர். கிழவியின் ஊர் மேலூர் அருகேயுள்ள சூரைகுண்டு. கிழவனின் ஊர் முன்றவன் கூட்டம். இவர்களுக்கு 60 வயதாகியும் குழந்தையில்லை. விரக்தியடைந்த கிழவன், ஒரு சந்தர்ப்பத்தில் கிழவியை திட்டி அவர்களது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால் மனமுடைந்த கிழவி, தாய் வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள அழிசி மர நிழலில் அமர்ந்து அய்யனாரை நினைத்து வேண்டியிருக்கிறார்.

அந்த சமயம், அய்யனார் ஒரு சிறுவன் வடிவில் வந்து, ‘நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ.எல்லாம் சரியாகி விடும்’ என ஆறுதல் கூறியிருக்கிறார். சிறுவன் என்றாலும் அவன் சொன்ன தொனிக்கு கட்டுப்பட்டு, கிழவியும் தன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறார். வழியில் அவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. பயந்து போன கிழவி, பிறந்த வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியிருக்கிறார். கோடங்கி அடித்துப் பார்த்ததில், சிறுவனாக வந்தது அய்யனார் என்று தெரிய வந்திருக்கிறது. கிழவி மட்டுமல்ல, நடந்ததற்காக வருந்தி தன் மனைவியை பார்க்க வந்த கிழவனும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

கையோடு கிழவியை தன்னுடன் அழைத்துச் சென்றார் கிழவன். அய்யனார் வாக்களித்தபடியே இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அய்யனாரே வந்து அருளியதற்காகவும், 60 வயதுக்குப் பிறகு 3 குழந்தைகளை பெற்றதற்காகவும் கிழவியை தெய்வமாகவே நினைத்து பகுதி மக்கள் வழிபட ஆரம்பித்தனர். ‘‘இங்க வந்து குழந்தை இல்லாதவங்க கும்பிட்டா, நிச்சயம் குழந்தை பிறக்கும். தனக்கு ஆறுதல் சொன்னது அய்யனார்தான்னு தெரிஞ்சதும், எந்த இடத்துல தனக்கு ஆறுதல் கிடைச்சுதோ, அந்த இடத்துல அய்யனாருக்கு கோயில் எழுப்பி, தான் வாழ்ந்த காலம் முழுக்க ஆண்டு தோறும் மண்ணுல குதிரை வைச்சு கிழவி வழிபட்டாங்க. அதை நாங்களும் விடாம செஞ்சுகிட்டு இருக்கோம்’’என்கிறார் கோயில் பூசாரி.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum