திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் நாளை கிரிவலம் வருகிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும்.
தினமும் மாலை 6 மணிக்கு மலையில் தீபம் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் பிரகாசிக்கும். அதற்காக சுழற்சி முறையில் பருவதராஜகுல மரபினர் மற்றும் கோயில் பணியாளர்கள் மலை மீது முகாமிட்டு தீபம் ஏற்றும் பணியை மேற்கொள்கின்றனர். இன்று இரவு ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பபோற்சவம் நடக்கிறது. நாளை இரவு பராசக்தியம்மன் தெப்பமும், நாளை மறுநாள் சுப்பிரமணியர் தெப்பமும் உலா வரும். ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவூடல் திருவிழாவின் போதும், தீபத் திருவிழா முடிந்த பிறகும் அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, நாளை காலை 6 மணியளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். கோயிலில் தொடங்கி 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதை முழுவதும் அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அண்ணாமலையார் கிரிவலத்தை முன்னிட்டு, கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
தினமும் மாலை 6 மணிக்கு மலையில் தீபம் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் பிரகாசிக்கும். அதற்காக சுழற்சி முறையில் பருவதராஜகுல மரபினர் மற்றும் கோயில் பணியாளர்கள் மலை மீது முகாமிட்டு தீபம் ஏற்றும் பணியை மேற்கொள்கின்றனர். இன்று இரவு ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பபோற்சவம் நடக்கிறது. நாளை இரவு பராசக்தியம்மன் தெப்பமும், நாளை மறுநாள் சுப்பிரமணியர் தெப்பமும் உலா வரும். ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவூடல் திருவிழாவின் போதும், தீபத் திருவிழா முடிந்த பிறகும் அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, நாளை காலை 6 மணியளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். கோயிலில் தொடங்கி 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதை முழுவதும் அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அண்ணாமலையார் கிரிவலத்தை முன்னிட்டு, கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர் தரிசனத்துக்கு வசதி
» கிரிவலம் கிழமையும் - பலன்களும்
» திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர் தரிசனத்துக்கு வசதி
» கிரிவலம் கிழமையும் - பலன்களும்
» திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya