Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


குபேரன் பயோடேட்டா

Go down

குபேரன்   பயோடேட்டா Empty குபேரன் பயோடேட்டா

Post by oviya Thu Dec 11, 2014 2:04 pm

குபேரன் தோன்றிய நாள், நட்சத்திரம் எது?

வியாழக்கிழமை, பூசம் நட்சத்திரம்.

உகந்த நைவேத்தியம்?

ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால். வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகளும் லக்ஷ்மி குபேர பூஜையில் வைக்கப்படுகின்றன.

இந்தியாவில் குபேர விக்ரகம் உள்ள புகழ் பெற்ற இடம் எது?

நாசிக் (இந்திய அரசாங்கம் கரன்ஸி அச்சடிக்கும் இடம்).

தமிழகத்தில்?

மதுரையிலுள்ள திருமங்கலத்தில்தான் முனீஸ்வரர் கோயிலில் குபேர விக்ரகம் தனியாக உள்ளது.

தனிக்கோயில் உள்ளதா?

பொதுவாக தனிக் கோயில் கிடையாது. சில சிவன் கோயில்களில் அவருடைய விக்ரகத்தைக் காணலாம். சென்னை அருகே, வண்டலூரில் ரத்னமங்கலத்தில் (க்ரசண்ட் கல்லூரி அருகில்) இப்போது புதிதாக குபேரருக்கென்றே பிரத்தியேகமாக ஒரு கோயில் உருவாகியிருக்கிறது.

அருகில் வீற்றிருக்கும் சங்கநிதி, பதுமநிதி இருவரும் யார்?

மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இருவர் சங்கநிதி, பதுமநிதி. இவ்விருவரிடமும் ஏராளமான பொருட்செல்வம் இருக்கிறது. தன் பொருட்களை இவர்களிடம் ஒப்படைத்து வைத்திருக்கிறான் குபேரன். குபேரனை வணங்கும்போது இந்த சக்திகளையும் வணங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இருவரும் குபேரனின் அருகில் வீற்றிருக்கின்றனர்.

சகோதரர் உண்டா?

உண்டு. ராவணன்.

அவர் கோலோச்சும் பட்டினம் எது?

குபேரபட்டினம் என்ற அழகாபுரி. தன் சிறந்த பக்தனான இவருக்கு ஈசனே உருவாக்கித் தந்த ஊர்.

எந்த திசைக்கு அதிபதி?

வடக்கு.

அமரும் ஆசனம் எது?

அழகாபுரி அரண்மனை மண்டபத்தில் தாமரைப்பூ, பஞ்சு மெத்தை போன்றவற்றின் மீது மீனாசனத்தில் அமர்ந்திருக்கிறார் குபேரன்.

மனைவி பெயர் என்ன?

சித்ரலேகா. இவளை சித்ராபவுர்ணமி அன்று நெய் தீபமேற்றி வணங்க அல்லவை அகன்று நல்லவை பெருகும்.

கையில் கீரிப்பிள்ளை வைத்திருப்பதேன்?

தேவி உபாசனையால் சகல சௌபாக்கியங்களைப் பெற்ற குபேரன் யோக சாதனை செய்ய நேரமில்லாதிருப்பவன். அதனால் குண்டலினி சக்தியை உயர்த்த அவன் எந்த யோகமும் செய்வதில்லை. பாம்பு, கீரியைக் கண்டால் படமெடுக்கும். எனவே, குபேரனின் கையில் உள்ள கீரியைப் பார்த்து குபேரனின் குண்டலினி சக்தி படிப்படியாக உயரும் என்பதை உணர்த்தவே அவன் கையில் கீரிப்பிள்ளை.

வாகனம் என்ன?

நர வாகனம். மனிதன் மேல் ஆரோகணித்துச் செல்பவன். அல்லது மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அமர்ந்து செல்வதில் பிரியமுள்ளவன்.

பிடிக்காதது எது?

வறுமை.

தனிப் பெருமை என்ன?

காக்கும் தொழிலைப் புரியும் நாராயணன், ஸ்ரீனிவாசனாக அவதரித்தபோது அவருக்கே திருமணக் கடனை தந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum