Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருப்பணிக்கு காத்திருக்கும் திருத்தலங்கள் : பாப்பான்குளம்

Go down

திருப்பணிக்கு காத்திருக்கும் திருத்தலங்கள் : பாப்பான்குளம் Empty திருப்பணிக்கு காத்திருக்கும் திருத்தலங்கள் : பாப்பான்குளம்

Post by oviya Thu Dec 11, 2014 2:04 pm

பாப்பான்குளம் எனும் இத்தலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர் ஆதித்திய வர்மன் நிர்மாணித்த சிவாலயம் ஒன்று உள்ளது. வாடாகலை நாயகி சமேத திரு வெண்காடர் இங்கே அருள்பாலிக்கிறார். மிகவும் அபூர்வமான சந்திரகாந்தக் கல்லினால் ஆனவர் இந்த மூலவர். அருகில் நின்று மூலவரைப் பார்த்தால் இறைவனின் திருமேனி சிறியதாகவும், அதே சற்றுத் தள்ளி, கொடிமரத்தின் அருகில் நின்று பார்த்தால் வடிவம் பெரியதாகத் தெரிகிறது! இந்த அமைப்பு வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகமே. அம்பாளின் திருநாமம் வாடாகலை நாயகி.

ஆயகலைகள் அறுபத்து நான்கும் அம்பாளின் திருவடியில் அமர்ந்ததாலும், 32 லட்சணங்களோடு அம்பாள் இத்தலத்தில் திகழ்வதாலும் அன்னைக்கு இந்தப் பெயர். பிரம்ம வித்யாம்பிகா என்று வடமொழியில் அழைப்பார்கள். அம்பாளுக்கு திங்கள், வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி நாளன்றும் பால், தேன், சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுகிறது. இத்தனை சிறப்பு பெற்றிருந்தாலும், தற்போது மிகவும் சிதிலமடைந்து விட இக்கோயில் பக்தர்களின் கூட்டு முயற்சியால் புனரமைப்புப் பெறவிருக்கிறது. திருப்பணி கைங்கரியத்தில் பங்கு பெற விரும்புவோர், 9486396383, 9965787745, 9486426872 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தலம் திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum