Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பிரம்மஹத்தி தோஷம் போக்கிய பரமன்

Go down

பிரம்மஹத்தி தோஷம் போக்கிய பரமன் Empty பிரம்மஹத்தி தோஷம் போக்கிய பரமன்

Post by oviya Thu Dec 11, 2014 2:10 pm

மடிக்கேரி

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய ஊர் மடிக்கேரி. மழைக்கும், குளிருக்கும், பச்சை பசேலென்ற பசுமைக்கும் பஞ்சமில்லாத ஊர். இந்த ஊரின் காவல் தெய்வமாகவும் வரப்பிரசாதியாகவும் திகழ்கிறார், ஓம்காரேஸ்வரர். குடகு அரசர் இரண்டாம் லிங்கராஜாவுக்கு ஒரு சமயம், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள நரபலி கொடுக்க வேண்டி வந்தது. அவர் ஒரு அந்தணரைத் தேர்ந்தெடுத்து தந்திரமாக பலி கொடுத்தார். ஆனால், அந்தப் பிராமணனோ, பிரம்மராட்சசனாக மாறி அரசருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். கெடுமதியாளர்களின் சொல்கேட்டு இப்படி ஒரு அப்பாவியை பலி கொடுத்து விட்டோமே என்று மிகவும் வருந்தினார். அதிலும் வேதமறிந்த ஒரு அந்தணரைக் கொல்வது என்பது எத்தகைய கொடிய பாவம் என்று பெரிதும் மனத் துயருற்றார். பிரம்மஹத்தி என்கிற கொடிய தோஷம் அவரைப் பற்றியது. தான் செய்த குற்றத்துக்குத் தான் தண்டனை அடைய வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டார். அரசவையிலுள்ள பல பண்டிதர்களிடம் யோசனை கேட்டார். அவர்கள் அறிவுறுத்தியபடி, காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்தார். காசியிலேயே அந்த அந்தணர் பொருட்டு அவருக்கான நீத்தார் கடன்களைத் தானே நிறைவேற்றினார்.

அதோடு, மடிக்கேரி எனும் இத்தலத்திலும் ஓம்காரேஸ்வரர் கோயிலை நிர்மாணித்தார். பிறகுதான் அந்த அந்தண பிரம்ம ராட்சசன் அவருக்குத் தொல்லை கொடுப்பதை தவிர்த்து ஈசனோடு ஈசனாக கலந்தான். மன்னனும் அதன் பிறகு முற்றிலும் ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களை நல்லாட்சி செய்தான். இந்தக் கோயில் முகலாயர்களின் கட்டிடக் கலை பாணியில் வித்தியாசமாக கட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் இருப்பது போல் நடுவில் கவிமாடம் (டூம்). நான்கு முனைகளையும், கலசங்கள் தாங்கிய நான்கு சிறு கவிமாடங்கள் அலங்கரிக்கின்றன. இங்குள்ள ஜன்னல் கம்பிகள்கூட பஞ்சலோகத் தால் ஆனவை. இதன் உள் வாசலை ஒட்டியுள்ள பகுதியில் கோயிலின் தல புராணத்தை செம்புத் தகட்டில் பொறித்து, பதித்து வைத்துள்ளனர். எதிரே அழகான குளம் உள்ளது. அதன் நடுவில் உள்ள சதுர மண்டபத்தை அடைய கரையிலிருந்து குளத்திற்குள் நெடிய பாதை! குளத்தில் ஏராள மான மீன்கள் நீந்தி மகிழ்கின்றன. அந்தத் தலமே மிக ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. பெங்களூரிலிருந்து 300 கி.மீ. தூரத்திலுள்ள இத்தலத்திற்கு மைசூர் வழியாகச் செல்ல வேண்டும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum