வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயில் தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரமோற்சவ தேரோட்டத்தை கலெக்டர் நந்தகோபால் வடம்பிடித்து இழுத்து நேற்று தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டு பிரம்மோற்சவ விழா தேரோட்டத்துடன் நேற்று மாலை தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் ஆறுமுகசாமி, வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்தார். முன்னதாக, கோயிலின் உள்ளே இருந்து சப்பரத்தில் ஆறுமுகசாமி அழைத்து வரப்பட்டார். கலெக்டர் நந்தகோபால் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் நடைபெற்ற வீதிகளில் இருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். தேர் திருவீதி உலா வள்ளிமலையை சுற்றியுள்ள சின்னகீசகுப்பம், சோமநாதபுரம், பெருமாள்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று 13ம் தேதி மீண்டும் நிலையை வந்தடையும். 14ம் தேதி காலை வேடர் பரிஉற்சவம், வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம், 15ம் தேதி 108 சங்காபிஷேக கேடய உற்சவமும் நடக்கிறது. தேர்திருவிழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் லீலா சுப்பிரமணியம், கோட்டாட்சியர் சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாரிவள்ளல், ஒன்றிய குழு தலைவர் கோகுலகிருஷ்ணா, ஊராட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன், கம்சலா ராஜாமணி, சதாசிவம், ஒன்றிய அதிமுக செயலாளர் சின்னதுரை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாலிங்கம், டிஎஸ்பி பாஸ்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் போலீஸ் பிரகாசம், கூட்டுறவு கடன் சங்க தலைவர் பெல்கார்த்திகேயன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் நாராயணன், ஸ்ரீசைலம், சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் ரஷித் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன், தக்கார் ஆய்வாளர் அய்யம்பிள்ளை, மேலாளர் நித்தியானந்தம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரமோற்சவ தேரோட்டத்தை கலெக்டர் நந்தகோபால் வடம்பிடித்து இழுத்து நேற்று தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டு பிரம்மோற்சவ விழா தேரோட்டத்துடன் நேற்று மாலை தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் ஆறுமுகசாமி, வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்தார். முன்னதாக, கோயிலின் உள்ளே இருந்து சப்பரத்தில் ஆறுமுகசாமி அழைத்து வரப்பட்டார். கலெக்டர் நந்தகோபால் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் நடைபெற்ற வீதிகளில் இருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். தேர் திருவீதி உலா வள்ளிமலையை சுற்றியுள்ள சின்னகீசகுப்பம், சோமநாதபுரம், பெருமாள்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று 13ம் தேதி மீண்டும் நிலையை வந்தடையும். 14ம் தேதி காலை வேடர் பரிஉற்சவம், வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம், 15ம் தேதி 108 சங்காபிஷேக கேடய உற்சவமும் நடக்கிறது. தேர்திருவிழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் லீலா சுப்பிரமணியம், கோட்டாட்சியர் சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாரிவள்ளல், ஒன்றிய குழு தலைவர் கோகுலகிருஷ்ணா, ஊராட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன், கம்சலா ராஜாமணி, சதாசிவம், ஒன்றிய அதிமுக செயலாளர் சின்னதுரை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாலிங்கம், டிஎஸ்பி பாஸ்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் போலீஸ் பிரகாசம், கூட்டுறவு கடன் சங்க தலைவர் பெல்கார்த்திகேயன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் நாராயணன், ஸ்ரீசைலம், சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் ரஷித் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன், தக்கார் ஆய்வாளர் அய்யம்பிள்ளை, மேலாளர் நித்தியானந்தம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» அமெரிக்காவில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோயில் திறப்பு
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» அமெரிக்காவில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோயில் திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya