போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைதாகலாம்?
Page 1 of 1
போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைதாகலாம்?
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில், 1990ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக இவர் மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவ கிறிஸ்துவ உதவித்தொகை சங்கம் (Association of Military Christian Fellowships) என்ற அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் சிறிலால் வீரசூரிய நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா வருவார் என்று நம்பப்படுகிறது.
இந்த அமைப்பில் ஜெனரல் வீரசூரிய முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
தமிழர்கள் பெருமளவில் நீதிக்குப் புறம்பான வகையில் கொன்று புதைக்கப்பட்ட செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் ஜெனரல் வீரசூரியவின் தொடர்பு குறித்து சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும் கரிசனை கொண்டுள்ளனர்.
சிம்பாப்வேயில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, தென்னாபிரிக்காவின் அதிகார வரம்புச் சட்டங்களின் கீழ், சம்பந்தப்பட்டோரை நீதியின் முன் நிறுத்த வேண்டியது தென்னாபிரிக்க அரசின் பொறுப்பு என்று அண்மையில், தென்னாபிரிக்க அரசியலமைப்பு நீதிமன்றம், உறுதிபடக் கூறியிருந்தது.
இது, இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் பொருந்தும் என்ற வகையில், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனிதகுலத்துக்கு எதிராக குற்றம் இழைத்த குற்றச்சாட்டில் ஜெனரல் வீரசூரியவை தென்னாபிரிக்காவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அழுத்தம் கொடுக்கலாம் என்று சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும் நம்புகின்றனர்.
செம்மணிப் புதைகுழி குறித்து நடத்தப்பட்ட விரிவான உண்மை கண்டறியும் செயல்முறைகளில், ஜெனரல் வீரசூரியவுக்கு இருந்த தொடர்புகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் சான்றுகளை சேகரித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில், 1990ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக இவர் மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவ கிறிஸ்துவ உதவித்தொகை சங்கம் (Association of Military Christian Fellowships) என்ற அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் சிறிலால் வீரசூரிய நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா வருவார் என்று நம்பப்படுகிறது.
இந்த அமைப்பில் ஜெனரல் வீரசூரிய முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
தமிழர்கள் பெருமளவில் நீதிக்குப் புறம்பான வகையில் கொன்று புதைக்கப்பட்ட செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் ஜெனரல் வீரசூரியவின் தொடர்பு குறித்து சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும் கரிசனை கொண்டுள்ளனர்.
சிம்பாப்வேயில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, தென்னாபிரிக்காவின் அதிகார வரம்புச் சட்டங்களின் கீழ், சம்பந்தப்பட்டோரை நீதியின் முன் நிறுத்த வேண்டியது தென்னாபிரிக்க அரசின் பொறுப்பு என்று அண்மையில், தென்னாபிரிக்க அரசியலமைப்பு நீதிமன்றம், உறுதிபடக் கூறியிருந்தது.
இது, இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் பொருந்தும் என்ற வகையில், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனிதகுலத்துக்கு எதிராக குற்றம் இழைத்த குற்றச்சாட்டில் ஜெனரல் வீரசூரியவை தென்னாபிரிக்காவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அழுத்தம் கொடுக்கலாம் என்று சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும் நம்புகின்றனர்.
செம்மணிப் புதைகுழி குறித்து நடத்தப்பட்ட விரிவான உண்மை கண்டறியும் செயல்முறைகளில், ஜெனரல் வீரசூரியவுக்கு இருந்த தொடர்புகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் சான்றுகளை சேகரித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி கொழும்பு திரும்பியுள்ளார்!
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» ஸ்திரமான அரசின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்! மலேசியாவின் முன்னாள் ஜனாதிபதி
» மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» ஸ்திரமான அரசின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்! மலேசியாவின் முன்னாள் ஜனாதிபதி
» மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya