Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்!

Go down

கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்! Empty கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்!

Post by oviya Thu Dec 11, 2014 3:01 pm

பெண்களுக்கு கவலைகள் அதிகம். சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக் கூட அவர்கள் கவலைப்படுவது இயல்பு. கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் கவலை வேறு விதம். தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று அவர்கள் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் பல கோயில்களில் வேண்டிக்கொள்வதும் வழக்கம். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலம், கபிஸ்தலம். கபிஸ்தலத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்தான் அது. இறைவி பெயர் காமாட்சி அம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது.

உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தில் பலிபீடம், நந்தியைக் கடந்தால் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும்  சனீஸ்வரனின் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபக்கம் இரட்டை பிள்ளையாரும், வலதுபுறம் காசி விஸ்வநாதரும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் காட்சி நல்குகிறார். மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி காமாட்சி அம்பிகையின் சந்நதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள்.

வலது மேல் கரத்தில் தாமரை மலரையும், இடது மேல் கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற நிலையில், புன்னகை தவழும்  இன்முகத்துடன் அன்னை அருள்பாலிக்கிறாள். கருவறை தேவ கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடதிசையில் துர்க்கை  அம்மனும் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் மேல் திசையில் பிள்ளையார், சுப்ரமணியர் சந்நதிகளும், வடதிசையில் சனீஸ்வரர் சந்நதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக  நாயகர்கள் உள்ளனர்.

பொங்கல் திருநாளில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு. தை முதல் நாள் காவிரியில் தீர்த்தவாரி, திரளான மக்களோடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் 11 பிரதோஷ நாட்கள் கலந்து கொண்டு இறைவன்-இறைவிக்கு அர்ச்சனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள். கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என இறைவியிடம் முறையிடுகின்றனர். அத்துடன் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வணங்குகின்றனர்.

பின் அந்த வளையல்களை பிற பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர். 90 நாட்களுக்குள் அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் பக்தர்கள். கன்னிப் பெண்களுக்கு தெய்வத் தாயாக காமாட்சி அம்பிகை விளங்குகிறாள் என்றால் அது மிகையல்ல; உண்மை. பல பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும் அன்னை காமாட்சியைத் தம் சொந்தத் தாயென கன்னியர் போற்றி மகிழ்வதில் வியப்பென்ன இருக்கிறது?
தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையிலுள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழகபிஸ்தலம் என்ற இந்தத் தலம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum