Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா ஆரம்பம்

Go down

மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா ஆரம்பம் Empty மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா ஆரம்பம்

Post by oviya Thu Dec 11, 2014 3:07 pm

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனான சிவன் எழுந்தருளியுள்ள கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோயிலில் பங்குனி விழா தொடங்கியது. விழாவின் முதல் நாளான கடந்த 6ம் தேதி பஜார் ரோடு அருகே உள்ள கோலவிழி அம்மன் ஆலயத்தில் காலை 10 மணிக்கு கிராம தேவதை பூஜையுடன் விழா ஆரம்பித்தது. அதை தொடர்ந்து, காளிதெய்வத்தின் விஷேச வடிவமான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில், சர்க்கரைப்பொங்கல் போன்ற சிறப்பு நிவேதனங்கள் அம்மனுக்கு படைக்கபட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. முதல் நாளன்று இரவு 9 மணிக்கு விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் வெள்ளியிலான மூஷிக வாகனத்தில் கணபதி புறப்பாடு நிகழ்ந்தது. பின்னர், புற்றுமண் சேகரித்தல் வைபவம் நடந்தது. இந்த வைபவத்தில் சேகரிக்கப்படும் புற்றுமண்ணில் முளைப்பாரி கட்டுவார்கள்.

முளைப்பாரி நன்றாக வளர்ந்தால், விழா நன்றாக நடக்கும், குறைகள் நீங்கும் என்பது ஐதீகம். கொடியேற்றம்: விழாவின் இரண்டாம் நாளில், 8.30 மணியளவில் இறைவன் கொடியேற்று மண்டபத்தில் காட்சி தந்தார். 9 மணிக்கு கொடியேற்றம் தொடங்கியது. இதில், 8 விதமான மங்கல பொருள்களுடன் வரையப்பட்ட ரிஷப சின்னம் பொறித்த கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். ரிஷபம் என்பது உயிர்சின்னமாக கருதப்படுகிறது. கொடியேற்றத்தைப் பார்க்கும்போது ஆன்மா சுத்தப்படும். சிந்தனைகள் மேல்நோக்கி செல்லும் எனபது ஐதீகம்.

உடல் ஆரோக்கியம் தரும் சூரிய, சந்திர வட்டம்:

எட்டாம் தேதியன்று பங்குனி விழாவின் மூன்றாம் நாள் கொண்டாட்டங்களான சூரிய வட்டம், சந்திர வட்டம் நடைபெற்றது. காலை 8.30க்கு நடைபெற்ற சூரிய வட்டத்தில் சிவன் கதிரவனில் தோன்றினார். இதை பார்ப்பவர்களுக்கு கண் உபாதைகள் நீங்குவதாக நம்பிக்கை உண்டு. அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நிலாவில் இறைவன் தோன்றும் வைபவம் நடந்தது. இதில் அம்பாள் கிளியிலும், முருகன் அன்னத்திலும் உலா வந்தனர். இதை தரிசப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்காம் நாளில்... நான்காம் நாளான இன்று காலை 6 மணிக்கு அதிகார நந்தி காட்சி, சம்பந்தர் ஞானப்பால் விழா, இரவு 9 மணிக்கு பூதன், பூதகி வாகனங்களில் வருதல் ஆகியன நடைபெறும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்
» மயிலையில் பங்குனி பெருவிழா உற்சாகம் : சவுடல் விமானத்தில் கபாலீஸ்வரர்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum