புத்தூர் குழுமாயி கோயிலில் இன்று குட்டிகுடி திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புத்தூர் குழுமாயி கோயிலில் இன்று குட்டிகுடி திருவிழா
8ம்தேதி குடிபுகும் நிகழ்ச்சி
திருச்சி : திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசிமாதத்தில் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவிற்காக கடந்த மாதம் 19ம் தேதி காப்புக்கட்டப்பட்டது. கடந்த 4ம்தேதி விழா துவங்கிய முதல்நாளில் புத்தூர் கிராம மக்கள் தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க, யானை மீது மலர்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு மலர் சாற்றப்பட்டது. பின்னர் அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்து புத்தூர் மந்தையில் அமைந்துள்ள பதுவு கோயிலில் வைத்தனர்.
இந்நிகழ்ச்சி காளியவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. நேற்று காலை அம்மன் ஓலைப்பிடாரியாக அலங்கரிக்கப்பட்டு, திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு மாவிளக்கு போட்டு பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து சுத்தபூஜை வழிபாடு செய்தனர். திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திகடன் நிறைவேற்றும் குட்டிக்குடி நிகழ்ச்சி இன்று (6ந்தேதி) காலை நடக்கிறது. காலை 10 மணியளவில் குட்டிக்குடி நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் இந்து அறநிலையத்துறை, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் கிடா கொடுக்கப்படுகிறது.
அதன் ரத்தத்தை குடித்து மருளாளி குட்டிக்குடி நிகழ்ச்சியை துவக்குவார். நேர்த்திக்கடன் செலுத்த நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று ஆடுகளை பலியிடுவார்கள். அந்த ஆடுகளின் ரத்தத்தையும் மருளாளி குடிக்கும் நிகழ்ச்சி இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் திருவீதி உலாவின் போதும், ஆட்டுக்கிடாக்கள் பலியிடப்பட்டு மருளாளியால் ரத்தம் குடிக்கப்படும். இதில் ஆயிரம் ஆடுகள் வரைபலியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை(7ம் தேதி) மஞ்சள் நீராட்டும், 8ம்தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, புத்தூர், உறையூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி : திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசிமாதத்தில் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவிற்காக கடந்த மாதம் 19ம் தேதி காப்புக்கட்டப்பட்டது. கடந்த 4ம்தேதி விழா துவங்கிய முதல்நாளில் புத்தூர் கிராம மக்கள் தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க, யானை மீது மலர்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு மலர் சாற்றப்பட்டது. பின்னர் அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்து புத்தூர் மந்தையில் அமைந்துள்ள பதுவு கோயிலில் வைத்தனர்.
இந்நிகழ்ச்சி காளியவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. நேற்று காலை அம்மன் ஓலைப்பிடாரியாக அலங்கரிக்கப்பட்டு, திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு மாவிளக்கு போட்டு பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து சுத்தபூஜை வழிபாடு செய்தனர். திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திகடன் நிறைவேற்றும் குட்டிக்குடி நிகழ்ச்சி இன்று (6ந்தேதி) காலை நடக்கிறது. காலை 10 மணியளவில் குட்டிக்குடி நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் இந்து அறநிலையத்துறை, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் கிடா கொடுக்கப்படுகிறது.
அதன் ரத்தத்தை குடித்து மருளாளி குட்டிக்குடி நிகழ்ச்சியை துவக்குவார். நேர்த்திக்கடன் செலுத்த நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று ஆடுகளை பலியிடுவார்கள். அந்த ஆடுகளின் ரத்தத்தையும் மருளாளி குடிக்கும் நிகழ்ச்சி இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் திருவீதி உலாவின் போதும், ஆட்டுக்கிடாக்கள் பலியிடப்பட்டு மருளாளியால் ரத்தம் குடிக்கப்படும். இதில் ஆயிரம் ஆடுகள் வரைபலியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை(7ம் தேதி) மஞ்சள் நீராட்டும், 8ம்தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, புத்தூர், உறையூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று மாலை முடிகிறது
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று மாலை முடிகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya